close
Choose your channels

பிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் வழக்கு: நடிகையின் புகாரால் பரபரப்பு

Saturday, January 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் மீது, நடிகை ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரோல் மாடல்ஸ், வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில் உள்பட ஒருசில திரைப்படங்களை தயாரித்தவர் வைஷாக் ராஜன். இவர் மீது மாடல் அழகி ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் செக்சன் 376 பிரிவின்படி வழக்குப்பதிவு செய்து எர்ணாகுளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு வைஷாக் ராஜனுக்கு சொந்தமான பங்களாவில் நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நடிகை கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் திலீப் மீது பிரபல நடிகை ஒருவர் கொடுத்த பாலியல் புகார் மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஒருவர் மீதும் பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைஷாக் ராஜன் தயாரித்த படங்களில் ஒன்றான 'வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில்' திரைப்படத்தில் திலீப் ஹீரோவாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.