பிறந்தநாளில் பசுமை மீது பாசம் காட்டும் இளம் நடிகை… வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,November 30 2021]

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை ராஷி கண்ணா தற்போது தமிழ் சினிமாவிலும் பிசியான நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் தனது 31 ஆவது பிறந்தநாளை சிறப்பித்த அவர் மரக்கன்று ஒன்றை நட்டு, பசுமைக்கு குரல் கொடுக்கும் அனைவருக்கும் நன்றி என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான “மெட்ராஸ் கஃபே“ எனும் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ராஷி கண்ணா தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வரவேற்பு பெற்ற நடிகையாக வலம்வந்தார். அதைத் தொடர்ந்து தமிழில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான “இமைக்கா நொடிகள்“ படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.

இதைத்தவிர “அடங்கமறு“, “சங்கத்தமிழன்“, “அரண்மனை3“, “துக்ளக் தர்பார்“ போன்ற படங்களில் நடித்திருந்த நடிகை ராஷி கண்ணா தற்போது நடிகர் தனுஷுடன் இணைந்து “திருச்சிற்றம்பலம்“ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கூடவே “சர்தார்“, “மேதாவி“, “சைத்தான் கே பட்சா“ போன்ற படங்களை தன்கைவசம் வைத்துள்ளார்.

இப்படி தமிழ், தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக வலம்வரும் நடிகை ராஷி கண்ணா இன்று தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதற்காக ஒரு சிறிய மரக்கன்றை நட்ட அவர் சென்ற பிறந்தநாள் முதல் மரக்கன்று நடுவது குறித்து சபதம் எடுத்துக்கொண்டேன். அதனால் இந்த சிறிய மரக்கன்றை நட்டு மாற்றத்தை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

மேலும் அன்னை பூமியை வளமாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஊக்குவிப்போம். மேலும் இதுபோன்ற முயற்சியை மேற்கொள்ளும் அனைவருக்கும் எனது நன்றிகள் என்ற நடிகை ராஷி கண்ணா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பிறந்த நாள் கொண்டாடும் நடிகை ராஷி கண்ணாவிற்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

என் வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தேன்… மனம் வருந்திய முக்கிய வீரர்!

தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

தனுஷே சந்தோஷப்படுவார்: 'மாநாடு' சர்ச்சை குறித்து வெங்கட்பிரபு விளக்கம்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் வில்லன் எஸ்.ஜே.சூர்யா கேரக்டருக்கு தனுஷ்கோடி என்ற பெயர் வைத்தது குறித்து தனுஷ்

சதீஷின் 'நாய்சேகர்' படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்: வேற லெவல் அப்டேட்!

தமிழ் திரை உலகின் பிரபல காமெடி நடிகர் சதீஷ் தற்போது கதாநாயகனாக 'நாய் சேகர்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

முன்னணியில் அபிஷேக்: வரிந்து கட்டி வேலை செய்யும் ஆடியன்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்றும் இந்த வாரம் மொத்தம் பத்து பேர் நாமினேஷன் செய்யப்பட்டு உள்ளனர்

நடிகை நந்திதா ஸ்வேதா அம்மாவை பார்த்ததுண்டா? இதோ வைரல் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான நந்திதா ஸ்வேதா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.