close
Choose your channels

இந்த தமிழக வீரருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. ரஷித்கான் புகழாரம்..!

Monday, May 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குஜராத் அணியில் உள்ள தமிழக வீரருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது என ரஷித்கான் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ள நிலையில் நேற்று நடைபெற இருந்த இறுதிப்போட்டி மழை காரணமாக இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன.

இந்த நிலையில் பிளே ஆப் 2 போட்டி முடிவடைந்ததும் ரஷீத் கான் பேட்டி அளித்தபோது தனது அணியில் உள்ள சாய் சுதர்சன் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். குஜராத் அணியில் இடம் பெற்றுள்ள சாய் சுதர்சன் மிகச்சிறந்த வீரர் என்றும் அவரை நான் வலைப் பயிற்சியில் கவனித்து இருக்கிறேன் என்றும் என்னை பொருத்தவரை அவர் ஒரு வித்தியாசமான வீரர் என்றும் அவரது உழைப்பை பார்க்கும்போது எதிர்காலத்தில் அவர் நிச்சயம் இந்திய அணியில் இடம் பெறுவார் என்றும் கூறியுள்ளார்.

அதேபோல் அபிநவ் மனோகர் சிறந்த வீரர் என்றும் அவரிடம் அபாரமான திறமை இருப்பதை நான் கவனித்தேன் என்றும் இன்னும் மூன்று ஆண்டுகள் விளையாடினால் அவர் மிகச்சிறந்த வீரராக வாய்ப்புண்டு என்றும் ரஷித்கான் தெரிவித்துள்ளார்.

சாய் சுந்தர் மற்றும் அபினவ் மனோகர் ஆகிய இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.