சிம்புவின் 'மாநாடு' படத்தில் இணையும் சூப்பர்ஹிட் பட நாயகி

  • IndiaGlitz, [Tuesday,January 08 2019]

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கிய 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே பிப்ரவரியில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அரசியல் மற்றும் ஆக்சன் படமான இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் வெளியான 'அடங்கமறு', கடந்த ஆண்டு வெளியான 'இமைக்கா நொடிகள்' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர்தான் இந்த ராஷிகண்ணா என்பது தெரிந்ததே.

ஆக்சன்கிங் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார்.