close
Choose your channels

வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்: விஜய் நாயகியின் கனவு

Monday, July 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் தேவரகொண்டா நடித்த 'டியர் காம்ரேட்' படத்தின் நாயகியான ராஷ்மிகா, விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்திலும் நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வருங்கால கணவர் குறித்த தனது கனவை அவர் தெரிவித்துள்ளார்.

எனது வருங்கால கணவர் இனிமையாக பழகுபவராக இருக்க வேண்டும். அவருடைய உணர்வுகளை நானும், என்னுடைய உணர்வுகளை அவரும் புரிந்து கொள்ள வேண்டும். அவருடன் நான் அதிக நேரம் இருக்கும் வகையில் இருக்க வேண்டும். மற்றபடி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் ஒரு பொருட்டல்ல' என்று தெரிவித்துள்ளார். ராஷ்மிகாவின் கனவுக்கேற்ற நாயகன் கிடைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு ராஷ்மிகாவுக்கும் அவருடன் நடித்த ரக்சித் ஷெட்டி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் இருவருக்கும் இடையே ஒருசில கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதால் இந்த நிச்சயதார்த்தம் ரத்தானது. தற்போது இருவரும் திரைப்பட பணிகளில் பிசியாக உள்ளனர்.

விஜய்-லோகேஷ் படத்தில் ராஷ்மிகா நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ஒன்றிலும் ராஷ்மிகா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த 'டியர் காம்ரேட்' திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.