close
Choose your channels

கொரோனாவால் இறந்த 87 வயது நபரின் உடலை எலி கடித்து குதறிய கொடூரம்!

Tuesday, September 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த ஒருவரின் உடலை எலிகள் கடித்து குதறிய சம்பவம் தனியார் மருத்துவமனை ஒன்றில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 87 வயது நபர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சமீபத்தில் சிகிச்சையின் பலன் இன்றி மரணம் அடைந்தார் இதனையடுத்து அவரது உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவரது உடலில் கால் மற்றும் முகம் பகுதியில் எலி கடித்த தடம் இருந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர் இதுகுறித்து அவர்கள் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் நீதி கேட்ட போது அவர்கள் சரிவர பதில் கூறவில்லை. இதனையடுத்து மாவட்ட கலெக்டரிடம் இது குறித்து உறவினர்கள் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் பணம் வாங்கும் தனியார் மருத்துவமனை, கொரோனாவால் இறந்தவரின் உடலை பாதுகாக்க கூட முடியவில்லையா? என்று உறவினர்கள் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.