close
Choose your channels

விவசாயியின் இறந்த உடலை… எலி கடித்து குதறிய கொடூரம்!

Friday, February 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாரடைப்பால் உயிரிழந்து மாச்சுவரியில் வைக்கப்பட்ட விவசாயி ஒருவரின் உடலை எலிகள் கடித்து குதறிய சம்பவம் ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்று இருக்கிறது. சோனிபட் பகுதியில் வசித்து வந்த ராஜேந்தர் எனும் விவசாயி கடந்த புதன்கிழமை மாரடைப்பால் உயிரிழந்து உள்ளார். அவருக்கு வயது 72. இதனால் பிரதேசப் பரிசோதனைக்காக அவரின் உடல் அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டது.

கடந்த புதன்கிழமை இரவு வைக்கப்பட்ட ராஜேந்தரின் உடலை பெறுவதற்காக வியாழக்கிழமை காலை அவரது உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது ராஜேந்தரின் உடலை பார்த்த உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். காரணம் சவக்கிடங்கில் வைக்கப்பட்டு இருந்த உடலை எலிகள் கடித்து குதறி இருக்கிறது. ஒரு நாள் இரவு மட்டுமே வைக்கப்பட்டு இருந்த ராஜேந்தரின் உடலை எலிகள் சேதப்படுத்தி இருக்கிறது. இதனால் 3 க்கும் மேற்பட்ட இடங்களில் சதைகள் கிழந்த நிலையில்… பார்ப்பதற்கே கோரமாக மாறி இருக்கிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்து உள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரந்திப் சிங் சுர்ஜேவாலா கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் இச்சம்பவத்தை அடுத்து இதுவே முதல் முறையும் அல்ல, இதற்கு முன்பு தெலுங்கானாவில் சவக்கிடங்கில் வைக்கப்பட்டு இருந்த பெண்ணின் மூக்கை எலிகள் தின்றுவிட்டது. அதேபோல் போபாலில் வைக்கப்பட்டு இருந்த ஒரு பெண்ணின் கண்களை எலிகள் குதறி இருக்கின்றன. இச்சம்பவங்களை அடுத்து அரசு மருத்துவமனைகளின் நிர்வாகத்தை சிலர் கேள்வி எழுப்பவும் தொடங்கி விட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.