ஹீரோக்களுடன் படுக்கையை பகிர்வது எழுதப்படாத  விதி: கமல் பட நடிகையின் திடுக்கிடும் பேட்டி

பாலிவுட்டில் ஹீரோக்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்றும் அதனை நான் செய்யாததால் வாய்ப்புகளை இழந்தேன் என்றும் கமல் பட நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளதூ.

கமல் நடித்த ’ஆளவந்தான்’ அர்ஜுன் நடித்த ’சாது’ உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் பல ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ரவீனா டாண்டன். தற்போது கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் முன்னணி ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் ரவீனா டாண்டன் கூறியபோது ’கடந்த 90ஆம் ஆண்டுகளில் எனக்கு வந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. அதற்கு காரணம் பாலிவுட்டின் உள்ள எழுதப்படாத விதி. இந்த விதியின்படி பாலிவுட்டில் ஹீரோக்களுடன் படுக்கையை பகிர வேண்டும். ஆனால் அதற்கு தான் உடன்படாததால் எனக்கு வந்த வாய்ப்புகள் பறிக்கப்பட்டன என்று கூறினார்.

மேலும், ‘என்னுடைய சினிமா பயணத்தை முடிவுக்கு கொண்டுவர பலர் முயற்சித்ததாகவும் அதிலிருந்து தற்போது தப்பிப்பது எனக்கு பெரிய விஷயமாக இருந்தது என்றும் நான் படுக்கையை பகிர வில்லை என்பதால் என்னை எந்த ஹீரோவும் சிபாரிசு செய்ய மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தன்னை திமிர் பிடித்தவர் என்றும் படப்பிடிப்புக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்றும் மீடியாவில் தவறான செய்திகளை பரப்பி தனக்கு வந்த வாய்ப்புகள் பறிக்கப்பட்டதாகவும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஏற்கனவே நெப்போட்டிஸம் குறித்து பல பிரபலங்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் படுக்கையை பகிராததால் தனது வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக ரவீனா டாண்டன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

கொரோனா நோயாளிகள் இருந்த மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து!!! 8 பேர் உயிரிழப்பு மற்றும் பரபரப்பு சம்பவம்!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ஷ்ரே மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று

லெபனான்: இடுபாடுகளுக்கு இடையே சிக்கிய செவிலியின் அசாத்தியம்!!! வைரலாகும் புகைப்படம்!!!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில்  நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தால் உலகமே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.

வாரிசு நடிகருக்கு ஜோடியாகும் 'ஓ மை கடவுளே' வாணிபோஜன்!

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை வாணி போஜன், அதன் பின்னர் அசோக் செல்வனின் 'ஓ மை கடவுளே' என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

'மாநாடு' திரைப்படம் டிரப்பா? சுரேஷ் காமாட்சி விளக்கம்

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மாநாடு'.

ஆவி பிடித்தால் கொரோனாவை விரட்டலாம்… பரபரப்பை ஏற்படுத்தும் விஞ்ஞானிகளின் புது தகவல்!!!

இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தில் உள்ள ஆவி பிடிக்கும் முறை அதாவது “ஸ்டீம் தெரபி” மூலம் கொரோனா வைரஸை விரட்ட முடியும் என்ற தகவலை மும்பையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் குழு ஒன்று தெரிவித்து இருக்கிறது.