ரவி மோகன் தயாரிக்கும் முதல் படம்.. 2 ஹீரோக்கள், 4 ஹீரோயின்கள், 2 பான் இந்திய வில்லன்கள்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த சில நாட்களுக்கு முன்னால், நடிகர் ரவி மோகன், "ரவி மோகன் ஸ்டுடியோ" என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்றும், அந்த நிறுவனத்தின் லோகோ கூட வெளியானது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில், இந்நிறுவனத்தின் முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரவி மோகன் ஸ்டுடியோ தயாரிக்கும் முதல் படத்தில், ரவி மோகன் மற்றும் எஸ்.ஏ சூர்யா என இரண்டு ஹீரோக்கள் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தை கார்த்திக் யோகி என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’டிக்கிலோனா’, ’வடக்குப்பட்டி ராமசாமி’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் டைட்டில் "ப்ரோ கோடு" என்று வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் என்பவர் இசையமைக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’அனிமல்’, ’அர்ஜுன் ரெட்டி’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் மட்டுமல்லாமல், நான்கு ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாகவும், அது மட்டும் இன்றி, இரண்டு பான் இந்தியா நடிகர்கள் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என்றும், இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் கலைச்செல்வம் என்றும், படத் தொகுப்பாளர் பிரதீப் ராகவ் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த அறிவிப்பை இயக்குனர் கார்த்திக் யோகி தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்துள்ள நிலையில், இன்னும் சில விவரங்களும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments