எங்கள் பிரிவுக்கு 3வது நபர் தான் காரணம்.. பாடகி கெனிஷாவை மறைமுகமாக தாக்கிய ஆர்த்தி ரவி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி பிரிவு குறித்த செய்திகள் பரபரப்பாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து ரவி மோகன் , ஆர்த்தி, சுஜாதா விஜயகுமார் ஆகியோர் மாறி மாறி தங்களது சமூக வலைதளங்களில் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கு நடுவில் ரவி மோகனை திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படும் பாடகி கெனிஷாவும் தனது instagram பக்கத்தில் ஒரு பதிவை செய்தார். அதில் சத்தங்களுக்கு மத்தியில் அமைதியான நம்பிக்கை ஒன்று காத்திருக்கிறது, என் ஆன்மா எனக்கு மன உறுதியை கொடுக்கிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் நான் இசையை பிடித்துக் கொண்டிருக்கிறேன், நாளைய விடியல் புதிய தொடக்கத்தில் நோக்கி பயணிக்கிறது’ என்ற குறிப்பிட்டுள்ளார் .
இந்த நிலையில் பாடகி கெனிஷாவை மறைமுகமாக விமர்சனம் செய்யும் வகையில் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
உங்கள் வாழ்வின் ஒளி என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வில் இருளை கொண்டுவந்தார் என்பதே உண்மை.
சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் முன்பே 3-வது நபர் எங்கள் வாழ்வில் வந்துவிட்டார்.
எங்கள் வாழ்வில் 3-வது நபரின் வருகையை வெற்று குற்றச்சாட்டாக அல்ல மாறாக போதுமான ஆதாரத்துடன் தான் கூறுகிறேன்.
கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ளது இந்த காலத்தில்.
என்னை சுற்றி நடக்கும் சமீபத்திய சூழ்ச்சிகளால் வேறு வழியின்றி என்னை மீண்டும் பேசும்படி செய்துவிட்டது.
என் பிடியிலிருந்து தப்ப நினைத்தால் அவர் தொலைத்ததாக கூறும் பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்.
எங்கள் வாழ்வில் அதிக சேதத்தை உண்டாக்கியவர் வீட்டின் கதவை ஏன் தட்டினார்.* துன்புறுத்தப்பட்டதாக தனிமைப்படுத்தப்பட்டதாக கூறும் ரவி ஏன் ஒவ்வொரு வருடமும் திருமண நாளை கொண்டாடினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.",
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com