'சென்னை 28 II' என் கதை போலவே உள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் ஆச்சரியம்

  • IndiaGlitz, [Tuesday,December 27 2016]

வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சென்னை 28 II' திரைப்படம், நாட்டில் ரூபாய் நோட்டு பற்றாக்குறை உச்சத்தில் இருந்தபோது வெளிவந்த படம். ஆயினும் இந்த படம் நல்ல வசூலை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரும், சமீபத்தில் மிகச்சிறந்த வீரர் என்று ஐசிசியால் அறிவிக்கப்பட்ட வீரருமான அஸ்வின் ரவிச்சந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

"என்ன ஒரு அற்புதமான படம் சென்னை 28 II'. என்னுடைய வாழ்க்கையை திரையில் பார்ப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. உண்மையிலேயே நானும் அந்த படத்தின் ஒரு கேரக்டராகவே இருந்தது போல் உணர்ந்தேன்'' என்று தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

இயக்குனர் வெங்கட்பிரபு 'சென்னை 28 II' படத்தின் இறுதியில் இதன் மூன்றாம் பாகமும் வெளிவரும் என்பது போல்தான் முடித்திருந்தார். எனவே 3ஆம் பாகத்தில் அவர் அஸ்வினை நடிக்க வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அஜித் ரசிகர் மன்ற தலைவராகும் ஆர்.கே.சுரேஷ்

'தாரை தப்பட்டை' படத்தில் கொடூர வில்லனாக நடித்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், தற்போது ஐந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தயார் நிலையில் 'பைரவா' டிரைலர். ரிலீஸ் எப்போது?

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

போயஸ் கார்டனில் சசிகலா-ஸ்ரீதேவி சந்திப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் தினமும் லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் திரையுலகினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ரூ.100க்கு பதில் ரூ.500. வள்ளலாக வாரி வழங்கிய ஏடிஎம்

நாட்டில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்.கள் இயங்காமல் முடங்கி இருக்கும் நிலையில் ஐதராபாத் விமான நிலையத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் ரூ.100க்கு பதிலாக ரூ.500ஐ வள்ளல் போல் வாரி வழங்கியதால் ஒருசில நிமிடங்களில் ரூ.8 லட்சம் பறிபோனது.

இன்று முதல் ஆஸ்கர் வின்னரின் மேற்பார்வையில் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.