close
Choose your channels

குடும்பத்திற்காக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய அஸ்வின்: அதிர்ச்சி தகவல்!

Monday, April 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குடும்பம் தான் முக்கியம் என்ற காரணத்தினால் ஐபிஎல் தொடரில் இருந்து தற்காலிகமாக விலக தமிழக வீரர் அஸ்வின் எடுத்த முடிவால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று நடைபெற்ற 19 ஆவது போட்டியில் சென்னை அணி பெங்களூரை வீழ்த்தியது என்பதும் 20 ஆவது போட்டியில் நடந்த சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் டெல்லி அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான அஸ்வின் தற்காலிகமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அஸ்வின் தனது குடும்பத்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இந்த நேரத்தில் அவர்கள் அருகில் இருந்து கவனிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் தற்காலிகமாக டெல்லி அணியில் இருந்து விலகுவதாகவும், ஆனால் அதே நேரத்தில் விரைவில் தனது குடும்பத்தினர் குணமாகியவுடன் மீண்டும் அணியில் இணைந்து கொள்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் அஸ்வினின் குடும்பத்தினர் விரைவில் கொரோனாவில் இருந்து குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அஸ்வின் திடீரென டெல்லி அணியில் இருந்து தற்காலிகமாக விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவா? என்பது அடுத்தடுத்த போட்டிகளின் போது தான் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.