'பொன்னியின் செல்வன்' தமிழில் ரிலீஸ் ஆகின்றதா? கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்விட்டர் பதிவு!

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழில் ரிலீஸ் ஆகிறதா என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் 2வது டி20 கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் நடைபெற உள்ளது. இதனை அடுத்து இந்திய அணி வீரர்கள் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் கவுகாத்தியில் உள்ள ஏதாவது திரையரங்கில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழில் ரிலீஸ் ஆகிறதா? என்று கேட்டுள்ளார். அதற்கு ட்விட்டர் பயனாளி ஒருவர் கவுகாத்தியில் உள்ள ஒரு திரையரங்கில் நாளை மதியம் 1.10 மணி காட்சி பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழில் வெளியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு பதிலளித்த அஸ்வின், ‘அந்த நேரத்தில் எனக்கு அணியின் பயிற்சி இருக்கும் என்றும் வேறு ஏதாவது நேரங்களில் ’பொன்னியின் செல்வன்’ படம் தமிழில் ரிலீஸ் ஆகிறதா என்பதை சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 

More News

செப்.30 'பொன்னியின் செல்வன்' ரிலீஸ் நாள் மட்டுமல்ல.. த்ரிஷாவுக்கு மேலும் ஒரு மறக்க முடியாத நாள்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 

2 வாரங்களுக்கு முன் ரிலீஸ் ஆன படத்தில் நடித்த நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை!

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆன படத்தில் நடித்த நடிகை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மனைவி சம்மதத்துடன் காதலியுடன் திருமணம்.. 2 மனைவிகளின் டார்ச்சரால் வாலிபர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

மனைவி சம்மதத்துடன் தான் காதலித்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்த வாலிபர் ஒருவர் எடுத்த அதிரடி முடிவால் இரண்டு மனைவிகளும் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர். 

தனுஷ் கேரக்டரில் நான், எனது கேரக்டரில் தனுஷ்.. பார்த்திபன் கூறிய ஆச்சரிய தகவல்!

தனுஷ் நடிக்க இருந்த கேரக்டரில் தான் நடித்ததாகவும், தான் நடிக்க இருக்கும் கேரக்டரில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். 

'நானே வருவேன்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? கலைப்புலி எஸ் தாணுவின் அதிரடி முடிவு!

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகிய 'நானே வருவேன்' என்ற திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை