இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்… மல்யுத்தப் பிரிவில் சாதனை படைத்த வீரர்!

ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர் ரவி குமார் தாஹியா அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதிப் பெற்றிருந்தார். தங்கப் பதக்கத்திற்கான இறுதிச் சுற்றில் அவர் வாய்பை நழுவவிட்டு தற்போது வெள்ளிப் பதக்கத்தை தக்க வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவிற்கு மற்றொரு பதக்கம் உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது.

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்ட ரவிக்குமார் முதலில் கொலம்பியாவை சேர்ந்த ஆஸ்கர் உர்பனாவை 13-2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார். அடுத்து 57 கிலோ எடைப்பிரிவில் பல்கேரியாவைச் சேர்ந்த ஜார்ஜி வாங்கெலோவை 14-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார்.

இதனால் காலிறுதிக்கு தகுதிப்பெற்ற அவர் மீண்டும் 57 கிலோ எடைக்கான ப்ரீ ஸ்டைலில் கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த நூரிஸ்லாம் சயனே என்பவரை தோற்கடித்தார். இதையடுத்து அவர் இறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தங்கப்பதக்கத்தை பெறுவதற்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. அப்போட்டியில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டதால் தற்போது ரவிக்குமார் தாஹியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்க இருக்கிறது.

இந்தியாவிற்கு ஏற்கனவே 4 பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் ரவிக்குமார் 5 ஆவதாக பதக்கம் பெற இருக்கிறார். இவரைத் தவிர 86 கிலோ எடைப்பிரிவுக்கான ப்ரீ ஸ்டைல் அரையிறுதிப்போட்டியில் இந்திய வீரர் தீபக் பூனியா 0-10 என்ற புள்ளிக்கணக்கில் அமெரிக்காவின் டேவிட் டெய்லரிடம் தோல்வி அடைந்தார். இருந்தாலும் அவர் வெண்கலப் பதக்கம் பெறுவதற்கான போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார்.

More News

கொரோனா பூஸ்டர் டோஸ் போடுவதை நிறுத்துங்கள்… கோரிக்கை வைக்கும் WHO… ஏன்?

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பூஸ்டர் டோஸ் போடுவதை உலக நாடுகள் குறைந்தது

பாலியல் புகாரளித்த பெண்....! அநியாயத்திற்கு ஆதாரம் கேட்ட பல்கலைக்கழகம்......!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர் பாலியல் புகாரளித்தற்கு, ஆதாரம் கேட்டுள்ளது அந்த நிர்வாகம்.

ஹாக்கியில் பதக்கம் வென்ற 8 வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு… அசத்தும் பஞ்சாப்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜெர்மனிக்கு எதிரான ஆடவர் ஹாக்கி போட்டியில் வெற்றிப்பெற்று

48 மணி நேரத்தில்... தனுஷூக்கு நீதிபதி அளித்த உத்தரவு!

நடிகர் தனுஷின் ஆடம்பர கார் வரி விவகாரம் குறித்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்த போது தனுஷ் தரப்பிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டார் என்பதை பார்த்தோம்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் வீடு, கார் பரிசு: ஹாக்கி அணி வீராங்கனைகளுக்கு வைர வியாபாரி அறிவிப்பு

ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் பதக்கம் வென்று வந்தால் அவர்களுக்கு வீடு கட்ட பணம், வீடு இருப்பவர்களுக்கு கார் வழங்கவுள்ளதாக குஜராத் வைர வியாபாரி சவிஜ் தோலாக்கியா என்பவர் அறிவித்துள்ளார்.