close
Choose your channels

மனைவி மகாலட்சுமிக்கு மாலை அணிவித்த ரவீந்தர்.. என்ன விசேஷம்?

Thursday, September 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்த நிலையில் தற்போது தனது மனைவிக்கு மாலை அணிவிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார் என்பது தெரிந்ததே. இந்த திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும் சமூக வலைத்தளங்களில் இந்த திருமணம் பேசுபொருள் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி திருமணம் முடிந்த கையோடு கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களுக்கும் ரவீந்தர் - மகாலட்சுமி தம்பதிகள் அளித்த பேட்டியின் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது. மேலும் ரவீந்தர் - மகாலட்சுமி தம்பதிகள் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று வந்த புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகியது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமிக்கு மாலை போடும் புகைப்படத்தை மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மகாலட்சுமிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடந்ததாகவும் இந்த நிகழ்ச்சியில் மகாலட்சுமி, ரவீந்தரின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரவீந்தர் - மகாலட்சுமி தம்பதிகள் மாலையும் கழுத்துமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.