மனைவி மகாலட்சுமிக்கு மாலை அணிவித்த ரவீந்தர்.. என்ன விசேஷம்?

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்த நிலையில் தற்போது தனது மனைவிக்கு மாலை அணிவிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார் என்பது தெரிந்ததே. இந்த திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும் சமூக வலைத்தளங்களில் இந்த திருமணம் பேசுபொருள் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி திருமணம் முடிந்த கையோடு கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களுக்கும் ரவீந்தர் - மகாலட்சுமி தம்பதிகள் அளித்த பேட்டியின் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது. மேலும் ரவீந்தர் - மகாலட்சுமி தம்பதிகள் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று வந்த புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகியது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமிக்கு மாலை போடும் புகைப்படத்தை மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மகாலட்சுமிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடந்ததாகவும் இந்த நிகழ்ச்சியில் மகாலட்சுமி, ரவீந்தரின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரவீந்தர் - மகாலட்சுமி தம்பதிகள் மாலையும் கழுத்துமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

சிரஞ்சீவி - நயன்தாராவின் 'காட்ஃபாதர்': மாஸ் டிரைலர் ரிலீஸ்

சிரஞ்சீவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'காட்ஃபாதர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. 

எம்ஜிஆர், சிவாஜியுடன் நடித்த நடிகையின் ரூ.20 கோடி சொத்து.. மீட்டு கொடுத்த தமிழக முதல்வர்!

எம்ஜிஆர், சிவாஜி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பழம்பெரும் நடிகையின் 20 கோடி ரூபாய் சொத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மீட்டு கொடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

காசியின் புனிதம் கலந்த காதல் காவியம் 'பனாரஸ்': ரிலீஸ் தேதி அறிவிப்பு!

”மிகச் சிறிய பட்ஜெட்களில் தயாராகி வந்த கன்னடப்படங்கள் இன்று பான் இந்தியா படங்களாக வளர்ந்திருப்பதோடு அவை இந்திய அளவில் நல்ல வசூல் வேட்டையையும் நடத்தி வருவதை நினைக்கும்போது

'பொன்னியின் செல்வன்' படத்தின் இந்த தகவலை கேட்டு ஆச்சரியம் அடைந்த எஸ்.எஸ்.ராஜமெளலி!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் முக்கிய தகவலை கேட்டு

மார்பில் ஆட்டோகிராப் போட சொன்ன ரசிகர்.. அதிர்ச்சி அடைந்த ராஷ்மிகா என்ன செய்தார் தெரியுமா?

நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் மார்பில் ஆட்டோகிராஃப் போடச் சொன்ன ரசிகர் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது.