புஷ்பாவாக மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்… இணையத்தில் வைரலான புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,January 14 2022]

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “புஷ்பா“. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப்பல மொழிகளில் வெளியான இந்தத் திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் புஷ்பா திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா செய்த ஒரு காரியம் ரசிகர்களை அதிகம் ஈர்த்திருக்கிறது. புஷ்பா திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் வாயில் பீடியை வைத்துக் கொண்டு லோக்கலான கெட்டப்பில் ஃபயர் தெறிக்க நடித்திருப்பதார். தற்போது இதே கெட்டப்பை ரவீந்திர ஜடேஜா கணக்கச்சிதமாக இமிடேட் செய்திருக்கிறார்.

பார்ப்பதற்கு ஏறக்குறைய புஷ்பாவாகவே மாறிய ரவீந்திர ஜடேஜா உண்மையில் நான் பீடியை குடிக்கவில்லை. இது புகைப்படத்திற்காக கிராஃபிஸ் செய்யப்பட்டு இருக்கிறது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் ஜடேஜாவை நடிகர் அல்லு அர்ஜுனின் கெட்டப்பில் பார்த்த ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியில் முன்னணி ஆல்ரவுண்டராக இருந்துவரும் ஜடேஜா நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியின்போது காயம் ஏற்பட்டு அணியில் இருந்து விலகிவிட்டார். தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா தொடர் போட்டியிலும் அவர் விளையாடாமல் இருந்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் இந்திய அணியில் இடம்பெறுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

More News

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரூ.50 கோடிக்கு வியாபாரமாகிவிட்டதா சூர்யா படம்?

சூர்யாவின் திரைப்படம் ஒன்று படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே திரையரங்குகளுக்கு பின் வெளியாகும் டிஜிட்டல் ரிலீஸ் உரிமை ரூ 50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தலைப்பொங்கல் கொண்டாடிய சினேகன் - கன்னிகா ரவி: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான சினேகன் மற்றும் கன்னிகா ரவி தலைப்பொங்கல் கொண்டாடியதன் புகைப்படங்கள் அவர்களுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

விஷாலின் 'வீரமே வாகை சூடும்': ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதி செய்த படக்குழு!

விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' என்ற திரைப்படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

சுந்தர் சி அடுத்த படத்தின் பூஜை: டைட்டில், நாயகி அறிவிப்பு!

பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர் சி இயக்கத்தில் 'அரண்மனை 3' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பதும் இதனை அடுத்து தற்போது அவர் 'தலைநகரம் 2' உள்பட மூன்று

சுந்தர் சியின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

கமல்ஹாசன் நடித்த 'அன்பே சிவம்', ரஜினிகாந்த் நடித்த 'அருணாச்சலம்' உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய இயக்குநர் சுந்தர் சி நடிகராகவும் தன்னை நிரூபித்து உள்ளார்