close
Choose your channels

ரஜினி, கமல் இணைந்தால் யாருக்கு பாதிப்பு: அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேட்டி

Saturday, February 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் இணையவுள்ளதாகவும், இதனையடுத்து அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அரசியலிலும் இணைந்து செயல்பட போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் ரஜினி, கமல் அரசியலில் இணைந்தால் தங்களுக்கு எதுவும் நஷ்டம் இல்லை என்று அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மதுரையில் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இணைந்தால் எங்களுக்கு என்ன? நாங்கள் மக்களோடு இணைந்து உள்ளோம். மக்கள் எங்களோடு இணைந்து உள்ளார்கள் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. கமல்ஹாசன் புரட்சிகரமான திட்டங்கள் குறித்து பேசியுள்ளார். முதலில் அவர் தமிழக மக்களுக்கு என்ன நன்மைகள் செய்தார் என்பதை பொதுவெளியில் பட்டியலிட்டு சொல்லட்டும். அதன்பின் திட்டங்கள் வெளியிடலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.