ஆண்டாள் குறித்த வழக்கை சந்திக்க தயார்… கவிஞர் வைரமுத்து எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் நாளிதழ் ஒன்றில் ஆண்டாள் குறித்த கட்டுரை ஒன்றை கடந்த 2017 ஜனவரி 7 ஆம் தேதி கவிஞர் வைரமுத்து வெளியிட்டு இருந்தார். இந்தக் கட்டுரை மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்து இருப்பதாக சிலர் வாதிட்டனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் சர்ச்சை வெடித்தது. அதோடு கவிஞர் வைரமுத்து மீது  முருகானந்தம் என்பவர் சென்னை கொளத்தூர் போலீஸில் வழக்குத் தொடுத்து இருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையை ரத்து செய்யுமாறு கவிஞர் வைரமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை கடந்த 2018 ஆம் ஆண்டு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் ஆண்டாள் குறித்த கருத்து தன்னுடைய கருத்து அல்ல. அமெரிக்க எழுத்தாளர் கூறிய கருத்தை நான் சுட்டிக் காட்டியிருந்தேன். இந்தக் கட்டுரையில் தவறான கருத்துகள் எதையும் குறிப்பிடவில்லை. மேலும் இதில் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக எந்த  கருத்தும் இடம்பெறவில்லை என விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த மனுவைத் தொடர்ந்து கொளத்தூர் போலீஸில் அளிக்கப்பட்ட வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. தற்போது  வைரமுத்து மீதான வழக்கை ரத்து செய்யுமாறு கோரிய வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வைரமுத்து சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரத்துசெய்யுமாறு கோரிய வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம். ஆண்டாள் குறித்த சர்ச்சை வழக்கை எதிர்ககொள்ள தயாராக இருக்கிறோம் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனால் ரத்து செய்யுமாறு கோரிய வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள நீதிபதி தண்டபாணி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வைணவ அடியார் ஆண்டாள் பற்றி தவறான கருத்துகளை கவிஞர் வைரமுத்து தெரிவித்து விட்டார். இதனால் மதப் பற்றாளர்களின் உணர்வுகளை அவர் புண்படுத்தி விட்டார் என்று ஒருசில தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. அந்த வழக்கின் மீதான விசாரணை நேரடியாக எதிர்கொள்ள தயார் என்று தற்போது வைரமுத்து சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

லட்சுமி ராமகிருஷ்ணனா இது? உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய வைரல் புகைப்படம்!

கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் பல நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கிளாமர் மற்றும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து நேரத்தை கழித்து வரும் நிலையில் நடிகை

விஜய்சேதுபதியுடன் பாடியதை நினைவு கூர்ந்த பிரபல விஜே! வீடியோ வைரல்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் ஒரு திரைப்பட பாடலை பாடியயதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல விஜே நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

அசோக்செல்வன் நடிக்கும் அடுத்த படத்தில் மூன்று நாயகிகள்!

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களின் படத்தில் இரண்டு அல்லது மூன்று ஹீரோயின்கள் ஒப்பந்தம் செய்யப்படுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது. அந்த வகையில் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும்

வாட்டர் பலூனில் குழந்தைகளுடன் விளையாடும் ரம்பா: வைரல் வீடியோ

நடிகை ரம்பா தனது மூன்று குழந்தைகளுடன் வாட்டர் பலூனில் விளையாடும் வீடியோவை வெளியிட்டு உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

நீயெல்லாம் ஒரு டான்ஸ் மாஸ்டரா? டான்ஸ் மாஸ்டர்கள் கலா-பிருந்தா பேட்டி!

தமிழ் திரையுலகின் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களான கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டர் ஆகிய இருவரும் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தங்களுடைய நடன இயக்குனர் அனுபவங்களை தெரிவித்துள்ளனர்