close
Choose your channels

நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போட்டால்தான் என் மகள் திருமணம்: 

Saturday, January 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேர்களுக்கும் வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து அவரை தூக்கில் போட உள்ள பவான் ஜல்லாத் என்பவர் தயார் நிலையில் உள்ளார். இவர் இந்த பணியை செய்யும் மூன்றாவது தலைமுறையினர் என்பது குறிப்பிடத்தக்கது. என் தந்தை தான் இந்திரா காந்தி கொலையாளிகள் இருவரை தூக்கில் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஒவ்வொருவரையும் தூக்கில் போட்டால் தனக்கு ரூபாய் 25 ஆயிரம் வீதம் ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும் என்றும் அந்த பணத்தில் தன்னுடைய மகளின் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். எனக்கு உத்திரப்பிரதேச சிறைத்துறையினர் மாதம் ரூபாய் ஐந்தாயிரம் மட்டுமே சம்பளமாக தருகின்றனர் அந்த பணத்தை வைத்து என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை

என் மகள் வளர்ந்து கொண்டே வருகிறார். அவருக்கு திருமண ஏற்பாடு செய்யக் கூட என்னிடம் பணம் இல்லை. இந்த நிலையில் நான்கு பேரை தூக்கு போடும் வாய்ப்பு தற்போது எனக்கு கிடைத்துள்ளது. குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போட்டால் அதில் கிடைக்கும் பணத்தை வைத்து என்னுடைய மகளின் திருமணத்தை நடத்திவிடுவேன்’ என்று கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.