ஓவியாவை ஓரம்கட்ட கபடி டீம் காரணமா? அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Friday,July 21 2017]

பிக்பாஸ் வீட்டிற்கு நேற்று 'தமிழ் தலைவாஸ்' கபடி அணியினர் வருகை தந்து கபடி விளையாடினர் என்பது தெரிந்ததே. அந்த நேரத்தில் கபடி அணியினர் பிக்பாஸ் பங்கேற்பாளர்களிடம் சகஜமாக பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது கபடி அணி வீரர்களில் ஒருவர் ஓவியாவிடம், 'வெளியே உங்களுக்குத்தான் மக்கள் சப்போர்ட் இருக்கின்றது, அதனால் நீங்கள் தான் இந்த நிகழ்ச்சியின் வின்னர்' என்ற உண்மையை உடைத்துள்ளார். இதை கேட்டதும் ஓவியா துள்ளி குதித்துள்ளார்.
இந்த விஷயம் மற்ற பங்கேற்பாளர்களுக்கு கசிந்ததால் ஓவியாவை எப்படியாவது இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று டார்ச்சர் கொடுத்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் ஓவியா வெளியேற்றப்பட்டால் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் மிகப்பெரிய அளவில் குறைந்துவிடும் வாய்ப்பும் உள்ளதால் அவரை அவ்வளவு விரைவில் அந்த தொலைக்காட்சி வெளியேற்ற்றும் முடிவை எடுக்காது என்றே ஊகிக்கப்படுகிறது.
ஓவியாவை வெளியேற்றினால் இந்த நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என்றும், #No oviya no bigboss என்ற ஹேஷ்டேக்கை ஏற்படுத்தி நெட்டிசன்கள் வைரலாக்கி வரும் நிலையில் பிக்பாஸ் என்ன முடிவெடுக்கின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

பரணியை அடுத்து ஓவியாவை ஓரங்கட்டும் பிக்பாஸ் குடும்பம்

பிக்பாஸ் குடும்பத்தில் உள்ள 15 பேர்களும் ஒற்றுமையாக ஒரே குடும்பமாக இருப்போம் என்று முதல் நாள் வாக்குறுதி அளித்தாலும், அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டனர் என்பது அடுத்தடுத்து அவர்கள் நடந்து கொள்ளும் விதத்திலேயே தெரிந்துவிட்டது.

இன்று மாலை 6 மணிக்கு 'மெர்சல்' ஆடிவெள்ளி கொண்டாட்டம்

ஆடிமாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் தமிழர்கள் புனிதமான நாளாக கருதி வரும் நிலையில் அந்த நாள் இன்று என்பது அனைவரும் அறிந்ததே.

அரசியலுக்கு தீபா ஆசைப்படும்போது, கமல் ஆசைப்படக்கூடாதா? நல்லக்கண்ணு

கமல்ஹாசன் அவருண்டு, அவருடைய உயிர் மூச்சான சினிமா உண்டு என்று இருந்த நிலையில் அவரை தேவையில்லாமல் ஒருசில அரசியல்வாதிகள் சீண்டிவிட்டதால் தற்போது விஸ்வரூபம் எடுத்து ஆட்சியாளர்களின் சிம்ம சொப்பனமாக மாறியுள்ளார்...

எல்லாமே ஸ்கிரிப்ட் படிதான் உள்ளே நடக்குது! பிக்பாஸ் உண்மையை பிட்டு வைத்த கஞ்சாகருப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பித்த முதல் நாளே சமூக வலைத்தளங்களில் இந்த நிகழ்ச்சி உண்மையான ரியாலிட்டி ஷோ இல்லை, இதுவொரு ஸ்கிரிப்ட் எழுதப்பட்ட சீரியல் என்று பலர் சமூக வலைத்தளங்களில் கூறினர். நாள் ஆக ஆக இது உண்மையாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது...

தரை லோக்கலாக இறங்கிய காயத்ரி. தராதரத்துடன் ஒதுங்கிய ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஒருவாரம் மட்டுமே டீசண்டாக இருந்த காயத்ரி அதன்பின்னர் அவருடைய சுயரூபம் வெளிப்படும் வகையில் நடந்து கொண்டு அனைவரின் வெறுப்பிற்கும் ஆளாகி வருகிறார்...