ராகவா லாரன்ஸ் போராட்டத்திற்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?

  • IndiaGlitz, [Thursday,March 02 2017]

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தனது பெரும் ஆதரவை கொடுத்த ராகவா லாரன்ஸ் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நெடுவாசல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருந்தார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறையும் உரிய அனுமதி கொடுத்திருந்த நிலையில் இன்று காலை ராகவா லாரன்ஸ் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருக்க வள்ளுவர் கோட்டம் வந்தார். ஆனால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று தமிழகம் வருகை தருவதால் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படதாக காவல்துறையினர் தெரிவித்ததால் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்து கலைந்து சென்றனர். இன்னொரு நாள் இந்த போராட்டம் நடைபெறும் என அவரது தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

More News

இந்த கம்பீரம் அந்த 122 பேர்களுக்கு இருக்குதா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

சசிகலா ஆதரவாளரான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த 122 எம்.எல்.ஏக்கள் பொதுமக்களின் அதிருப்தியை பெற்று சொந்த தொகுதிக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த 122 எம்.எல்.ஏக்கள் குறித்து நடிகரும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டால

அமிதாப்-ஜெயாவுடன் ஒப்பிடப்பட்ட அமெரிக்க துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்ரீனிவாஸ் மற்றும் அவரது மனைவி.

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் பகுதியில் இனவெறியன் ஒருவனால் துப்பாக்கி சூட்டில் பலியான இந்திய பொறியாளர் ஸ்ரீனிவாஸ் அவர்களின் மரணம் அவரது குடும்பத்தினர்களை மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

ரஜினியுடன் அதிமுக எம்.எல்.ஏ திடீர் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது போயஸ் கார்டன் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏவும் நடிகருமான கருணாஸ் திடீரென சந்தித்துள்ளார்.

குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர். உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

ஒருபக்கம் நேற்று முதல் தமிழகத்தில் பெப்சி கோக் போன்ற வெளிநாட்டு பானங்களை விற்பதில்லை என்று வணிகள் முடிவெடுத்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி, கோக் உள்பட குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீக்கியுள்ளது.

குஷி-2, வாலி-2 படங்களின் ஹீரோக்கள் யார். எஸ்.ஜே.சூர்யா

அஜித் நடித்த 'வாலி' மற்றும் விஜய் நடித்த 'குஷி' என தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களின் வெற்றி படத்தை இயக்கிய பெருமை பெற்றவர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா.