'விஐபி 2' விழாக்களில் ஐஸ்வர்யா தனுஷ் கலந்து கொள்ளாதது ஏன்? செளந்தர்யா

  • IndiaGlitz, [Monday,July 10 2017]

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், கஜோல் நடித்த 'விஐபி 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதும் சரி, சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலும் சரி தனுஷின் மனைவியும், இயக்குனர் செளந்தர்யாவின் சகோதரியுமான ஐஸ்வர்யா கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து செளந்தர்யா கூறியபோது, 'அக்கா ஐஸ்வர்யாவின் உதவியும் சப்போர்ட்டும் எனக்கு எப்போதும் இருந்தது உண்டு. அவர் இரண்டு படங்களின் ஸ்க்ரிப்டில் பிசியாக இருப்பதால் விழாக்களில் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் தனுஷ் உள்பட எங்கள் படக்குழு அனைவருக்கு ஐஸ்வர்யா வாழ்த்து தெரிவித்தார்' என்று கூறினார்.

மேலும் 'விஐபி 2' படம் எடுக்க வேண்டும் என்ற ஐடியா எங்களுக்கு முதலில் இல்லை. நான் முதலில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் ஸ்கிரிப்டில் கவனம் செலுத்தியிருந்தேன். அந்த சமயத்தில் நானும் தனுஷூம் டிஸ்கஸில் இருந்தபோது 'விஐபி 2' ஒன்லைன் கிடைத்தது. அதை அப்படியே விரிவுபடுத்தி இந்த படம் இன்று உங்கள் முன்னாள் வந்துவிட்டது. இந்த படத்திற்கு ஒரு வித்தியாசமான இசை தேவைப்பட்டதால் நாங்கள் சீன் ரோல்டானை அணுகினோம். படத்தின் பாடல்களை கேட்டு அனிருத் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தார்.

மேலும் வசுந்தரா கேரக்டரில் சூப்பர் ஸ்டார் நடிக்க வேண்டிய கேரக்டர் என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்று கூறிய செளந்தர்யா, வசுந்தரா பரமேஸ்வரன் என்ற கேரக்டரை கஜோல் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு பொருத்தமாக இருந்திருக்காது' என்று கூறினார். மேலும் இந்த படம் குறித்து செளந்தர்யா மேலும் கூறியபோது, 'இந்த படம் விஐபி படத்தின் அடுத்தபாகமாக சரியான வகையில் அமைந்துள்ளது. கண்டிப்பாக எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்' என்று கூறினார்.

More News

ஹாலிவுட் பட ஸ்டைலில் ஒரு வித்தியாசமான திருட்டு: 3 கிலோ நகைகள் கொள்ளை

பெங்களூரில் உள்ள ஒரு நகைக்கடையில் ஹாலிவுட் பட ஸ்டைலில் 3 கிலோ நகைகளை ஒரு திருடன் கொள்ளையடித்துவிட்டு மாயமாகியுள்ளான். அந்த திருடனை பிடிக்கும் முயற்சியில் பெங்களூர் போலீசார் தீவிரவேட்டையில் உள்ளனர்...

பிஜி தீவில் வெங்கட்பிரபுவின் பிரமாண்டமான 'பார்ட்டி' ஆரம்பம்

'சென்னை 60002'8 படத்தின் 2ஆம் பாகத்தை அடுத்து இயக்குனர் வெங்கட்பிரபு அவர்கள் 'பார்ட்டி' என்ற படத்தை இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியான செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்...

மணிரத்னம் அடுத்த படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற கலைஞர்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதிராவ் நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து கடந்த சில நாட்களாக இணையதளங்களில் செய்தி வெளியாகி வருகிறது...

'எங்கடா இருந்திங்க இவ்வளவு நாளா?: தயாரிப்பாளர் ஆனார் 'நான் கடவுள்' ராஜேந்திரன்

ஸ்டண்ட் நடிகராக இருந்த ராஜேந்திரன், இயக்குனர் பாலாவின் 'நான் கடவுள்' படத்தின் மூலம் நடிகரானார். அதன் பின்னர் விஜய், அஜித் உள்பட பிரபலங்களின் படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நகைச்சுவை நடிகர்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி பார்வையாளர்களின் பாராட்டையும், கடுமையான விமர்சனத்தையும் மாறி மாறி பெற்று வரும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் கஞ்சாகருப்பு பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்...