நந்தினி கணவர் தற்கொலைக்கு காரணம் யார்? கடிதம் ஏற்படுத்திய திருப்பம்

  • IndiaGlitz, [Wednesday,April 05 2017]

பிரபல தொலைக்காட்சி நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கார்த்திக்கின் தற்கொலைக்கு நந்தினியின் தந்தையே காரணம் என அவர் எழுதி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதால் போலிசார் நந்தினியின் தந்தை ராஜேந்திரனை விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணைக்கு பின்னர் இந்த தற்கொலை வழக்கு வேறு வழக்காக மாறவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கார்த்திக் தனது கடிதத்தில் எழுதியுள்ளதாவது: "என் மரணத்துக்குக் காரணம், என் மாமனார் ராஜேந்திரன்தான் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், என்னையும் என் மனைவியையும் பணத்துக்காக ராஜேந்திரன் பிரித்துவிட்டார். நான் பல முறை நந்தினியிடம் போனில் பேச முயற்சித்தேன். அதையும் அவர் தடுத்துவிட்டார். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால்தான் தற்கொலை செய்துகொள்கிறேன். மேலும், நான் என் மாமனாரிடம் கெஞ்சிப் பேசினேன். அதையும் அவர் கேட்கவில்லை. இது, எனக்கு மேலும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. என்னுடன் நந்தினியைப் பேசவிடாமல் தடுக்கும் வகையில் என்னுடைய போன் காலை பிளாக் செய்துவிட்டார். எங்கள் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட வைத்துவிட்டார். நான் சாக, முழுக்க முழுக்க காரணம் என் மாமனார் ராஜேந்திரன்தான்" என்று எழுதப்பட்டுள்ளது.
மேலும் கார்த்திக் தனது சகோதரி ரம்யாவுக்கு தனியாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'ரம்யா, அம்மாவைப் பார்த்துக்கொள். எனக்கு வாழத் தெம்பு இல்லை. இத்தனை நாள் பிணமாகத்தான் வாழ்ந்தேன். என்னால் வாழ முடியவில்லை. இனிமேல் நான் இருப்பது வேஸ்ட். என் கௌரவம், மரியாதை போய்விட்டது. அம்மாவைப் பார்த்துக்கொள். என் கடைசி ஆசை என்னவென்றால், வெண்ணிலாவைப் புதைத்த இடத்தின் அருகே என்னைப் புதைத்துவிடுங்கள். வெண்ணிலா பக்கத்தில் என்னைப் புதையுங்கள். ஃப்ளீஸ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

அஜித்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுமா? ராஜ்கிரண்

பிரபல குணச்சித்திர நடிகர் ராஜ்கிரண் தனுஷ் இயக்கத்தில் நாயகனாக நடித்த 'பவர்பாண்டி' திரைப்படம் இம்மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

சென்னை மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை. கலெக்டர் உத்தரவு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் 12ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் ஏப்ரல் 15ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் வெளியாகவுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த பட ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்து வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

யுவன்ஷங்கர் ராஜா-கார்த்திக் ராஜா இணைந்த தமிழ்ப்படம்

இசைஞானி இளையராஜாவின் இசை வாரீசுகளாக அவரது மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் இருந்தபோதிலும் யுவன்ஷங்கர் ராஜா தற்போது முன்னணி இசையமைப்பாளர்களின் பட்டியலில் உள்ளார். அதுமட்டுமின்றி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் 'கொலையுதிர்க்காலம்' எ&#

டெல்லியில் போராடும் விவசாயி அய்யாக்கண்ணு திடீர் மயக்கம். மருத்துவமனையில் அனுமதி

தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வங்கிக்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை  தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்து நடத்தி வருகிறார்...