இதனால் தான் கனியை விட்டு பிரிந்தாரா ? சமீபத்தில் ரசிகனின் ரசிகன் மணி கூறிய பல தகவல்கள்.

  • IndiaGlitz, [Tuesday,March 26 2024]

 

டிக் டாக், யூடியூப்,இண்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் தம்பதியாக வீடியோ வெளியிட்டு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று பிறகு இருவரும் பிரிந்து வைரலாகிய ஆர்ஆர் மணி அவர்கள் அவள் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்

யார் இந்த ஆர்ஆர் மணி ? இவர் ரசிகனின் ரசிகன் எனும் யூடியூப் சேனல் வைத்துள்ளார்.இவர் செல்லும் இடமெல்லாம் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என இவ்வளவு ரசிகர் பட்டாளம் எப்படி வந்தது ? மணி மற்றும் கனி இருவரும் டிக் டாக் வீடியோ செய்யும்போதிலிருந்தே இவர்களுக்கென தனி ரசிகர்கள் இருந்தனர்.சமீபத்தில் இருவரும் பிரிந்து விட்டனர்.

நான் இருக்கின்ற எல்லா சமூக வலைத்தளங்களிலும் கனியை பிளாக் செய்து விட்டேன்.ஆனாலும் அவர்களை பற்றிய எல்லா செய்தியும் எனக்கு வந்து கொண்டே இருக்கிறது.என்னுடைய பாலோவர்ஸ் எல்லோரும் என்னிடம் வந்து கேட்பார்கள் பேசுவார்கள் பிறகு அவர்களே நீங்கள் செய்வது தான் சரி என கூறி விடுவார்கள்.கனி இருந்த இடத்திற்கு யாரையும் கொண்டு வர மாட்டேன்.அதே சமயத்தில் அவர்களோடும் சேர்ந்து வாழ மாட்டேன்.

மேலும் காதல் மற்றும் திருமணம் இதை பற்றிய பேச்சே நான் எடுப்பதில்லை .விரும்புவதும் இல்லை.நான் இப்போது எந்த முடிவும் எடுப்பதில்லை .நிறைய விஷயத்தில் பாடம் கற்று கொண்டேன்.இதற்கு மேல் என்னால் முடியவில்லை.சோஷியல் மீடியா வாழ்க்கையை பொறுத்தவரை இரண்டாவது , மூன்றாவதாக கல்யாணம் ,லிவிங் டுகெதர் இதெல்லாமே சர்வ சாதாரணமாக ஆகி விட்டது.

ஆனால் எனக்கு இதில் துளி கூட உடன்பாடில்லை.நான்‌ என் வாழ்க்கையை எனக்கு பிடித்தது போல் அமைத்து கொள்ள ஆயிரம் வழிகள் மற்றும் காரணங்கள் உள்ளன.எதுவும் வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறேன்.நான் ஏதாவது தவறு செய்தால் என் அம்மாவின் வளர்ப்பை பற்றி தவறாகப் பேசுவார்கள்.அவர்களுக்கு எந்த ஒரு கெட்டப் பெயரையும் உருவாக்கி விடக்கூடாது என்ற மனநிலையில் இருக்கிறேன்.

அதே போல் எனக்கு எதிரான சதிகள் பல நடந்து இருக்கின்றன.அதில் இருந்து மீண்டு வர நிறைய கஷ்டப் பட்டுள்ளேன்.அதுமட்டுமில்லாமல் இரண்டு பேரும் சேர்ந்து தான் இருக்கிறீர்கள் நான் பார்த்தேன் என்னிடம் ஆதாரம் உள்ளது என்றெல்லாம் பேசுவார்கள்.அது எதுவுமே உண்மை இல்லை.

வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டம் தான் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது.நான் பட்ட அவமானம் என்னுடைய ரசிகனுக்கு ஏற்படக் கூடாது.நான் சிறுவயதாக இருக்கும்போதே என் அப்பா தவறி விட்டார்‌.அப்போது உள்ள காலக்கட்டத்தில் கணவர் இல்லையென்றால் விதவைகளை ஒதுக்கி வைக்கும் அவலம் இருந்தது.

ஊரால் ஊர் மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட என் குடும்பத்தை எல்லோரும் பார்க்கும்படி வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதே பெரிய இலக்காக இருந்தது என மணி அவர்கள் மனம் கலங்கி கூறிய தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

More News

வாழ்க்கையில் ஒருமுறை மட்டும் நடக்கக்கூடியது.. நாளை மறுநாள் ரிலீஸ் படத்திற்கு சூர்யா வாழ்த்து..!

நாளை மறுநாள் ரிலீஸ் ஆக இருக்கும் படத்திற்கு நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அந்த வாழ்த்து பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசனின் 'சத்யா' ரீமேக் ஆகிறதா? நாயகன், இயக்குனர் இவர்களா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், இசை ஞானி இளையராஜா இசையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'சத்யா'.

அடுத்தடுத்து வெளியாகும் 'ரத்னம்' பட அப்டேட்டுகள்.. இன்று என்ன தெரியுமா?

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் புரட்சித் தளபதி விஷால் நடிப்பில் உருவான 'ரத்னம்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஒரே தொகுதியில் ஐந்து ஓபிஎஸ் போட்டி.. ஒரிஜினல் ஓபிஎஸ்-க்கு வந்த சோதனை..!

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இணைந்து ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதும் அவர் சமீபத்தில் தான் வேட்புமனு  

காமெடி நடிகர் சேஷு காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல காமெடி நடிகர் 'லொள்ளு சபா' சேஷு சற்றுமுன் காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்