மற்றொரு பிரபல நடிகரின் படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவீஸ்!

  • IndiaGlitz, [Tuesday,June 14 2022]

கடந்த ஒரு வருடமாக பிரபல நடிகர்களின் படங்களை வெளியிட்டு வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மேலும் ஒரு பிரபல நடிகர் படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் வெளியான ரஜினியின் ‘அண்ணாத்த’, சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ விஜய்யின் ’பீஸ்ட்’, ‘விஜய் சேதுபதியின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ சிவகார்த்திகேயனின் ’டான்’ கமல்ஹாசனின் ’விக்ரம்’ ஆகிய படங்களை ரிலீஸ் செய்தது.

இந்த நிலையில் தற்போது அடுத்ததாக கார்த்தி நடித்துள்ள ’சர்தார்’ படத்தின் ரிலீஸ் உரிமையையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பை உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார் .

உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டு வரும் பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்று வருவதை அடுத்து ’சர்தார்’ திரைப்படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

பிரார்த்தனை செய்தாலும் இறைவனை மீறி எதுவும் நடக்காது:  அமெரிக்கா செல்லும் முன் டிஆரின் கண்ணீர் பேட்டி

என்னதான் பிரார்த்தனை செய்தாலும் இறைவனின் விதியை மீறி எதுவும் நடக்காது என உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் முன் டி ராஜேந்தர் பேட்டியளித்துள்ளார். 

'சந்திரமுகி 2' படத்தின் அறிவிப்பில் ஒரு ஆச்சரியம்: வைரல் போஸ்டர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பி வாசு இயக்கத்தில், சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'சந்திரமுகி'. இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று

தமிழ் சினிமாவின் மான மரியாதையை காப்பாற்றிய படம் 'விக்ரம்': பிரபல தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவின் மானம் மரியாதையை காப்பாற்றிய படம் 'விக்ரம்' என்ற பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

சூர்யாவுக்கு கொடுத்த ரோலக்ஸ் வாட்சுக்கு இப்படி ஒரு செண்டிமெண்ட் இருக்கின்றதா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று இரண்டாவது வாரத்திலும் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்குகளில் ஓடிவருகிறது.

'புன்னகை மன்னன்' ஸ்டைலில் ஒரு சம்பவம்: ஆனால் வேற லெவல் டுவிஸ்ட்!

கமல்ஹாசன் நடித்த 'புன்னகை மன்னன்' ஸ்டைலில் தற்கொலை செய்து கொள்ள ஒரு காதல் ஜோடி சென்ற நிலையில் அந்த சம்பவத்தில் நடந்த டுவிஸ்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.