கணவர் மற்றும் செல்ல மகனுடன் செல்பி: வைரலாகும் விஜய் நாயகியின் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Monday,July 06 2020]

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய முதல் திரைப்படமான ’மின்னலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரீமாசென். அதன்பின் தளபதி விஜய்யுடன் ’பகவதி’, மாதவனுடன் ’ஜேஜே’, விஷாலுடன் ’செல்லமே’, சிம்புவுடன் ’வல்லவன்’ மற்றும் செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’உள்பட ஒரு சில திரைப்படங்களில் ரீமா சென் நடித்தார்.

நடிகை ரீமாசென் கடந்த 2012ஆம் ஆண்டில் தொழில் அதிபர் ஷிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2013 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து ஒதுங்கியுள்ள ரீமாசென் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அந்த வகையில் இந்த லாக்டவுன் காலத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒருசில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

குறிப்பாக தனது கணவர் மற்றும் செல்ல மகனுடன் எடுத்த செல்பி புகைப்படங்கள் நெட்டிசன்களை கவர்ந்து வருகின்றன. மேலும் சினிமாவில் நடிக்கும்போது கவர்ச்சியில் கலக்கிய ரீமாசென், தற்போது குடும்பப்பாங்கான உடையில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

தயாரிப்பாளரை ஹீரோவாக்கிய மிஷ்கின் சகோதரர்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கினின் சகோதரர் ஆதித்யா கடந்த 2018 ஆம் ஆண்டு 'சவரக்கத்தி' என்ற திரைப்படத்தை இயக்கினார்.

10 கிலோ குறைந்த எடை: ஸ்லிம்மாக மாறியதன் ரகசியத்தை சொல்லும் ஷெரின்

தனுஷ் அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன்பின்னர் 'விசில்' உள்பட பல திரைப்படங்களில் நடித்த ஷெரின்

வந்துவிட்டது... 2020 இன் அடுத்த வைரஸ் பெருந்தொற்று!!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!!

கொரோனா, ஸ்வைன் ஃப்ளூவை தொடர்ந்து 24 மணி நேரத்தில் மனிதர்களைக் கொல்லக்கூடிய மற்றொரு நோய்த்தொற்று சீனாவில் பரவி வருவதாகத் தற்போது பரபரப்பு செய்தி வெளியாகி இருக்கிறது.

லண்டன் To கொல்கத்தாவுக்கு பஸ்ஸில டிராவலா??? தலைச் சுற்ற வைக்கும் ஆச்சர்யத் தகவல்!!!

சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக ஒரு பரபரப்பு தகவல் பகிரப்பட்டு வருகிறது.

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம், 2 ஆண்டுகள் சிறை: அதிரடி அறிவிப்பு

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸின் பாதிப்பு மிகவும் குறைந்து கொண்டே வந்ததால் மிக விரைவில் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக கேரளா மாறும்