close
Choose your channels

கணவர் மற்றும் செல்ல மகனுடன் செல்பி: வைரலாகும் விஜய் நாயகியின் புகைப்படங்கள்

Monday, July 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய முதல் திரைப்படமான ’மின்னலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரீமாசென். அதன்பின் தளபதி விஜய்யுடன் ’பகவதி’, மாதவனுடன் ’ஜேஜே’, விஷாலுடன் ’செல்லமே’, சிம்புவுடன் ’வல்லவன்’ மற்றும் செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’உள்பட ஒரு சில திரைப்படங்களில் ரீமா சென் நடித்தார்.

நடிகை ரீமாசென் கடந்த 2012ஆம் ஆண்டில் தொழில் அதிபர் ஷிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2013 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து ஒதுங்கியுள்ள ரீமாசென் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அந்த வகையில் இந்த லாக்டவுன் காலத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒருசில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

குறிப்பாக தனது கணவர் மற்றும் செல்ல மகனுடன் எடுத்த செல்பி புகைப்படங்கள் நெட்டிசன்களை கவர்ந்து வருகின்றன. மேலும் சினிமாவில் நடிக்கும்போது கவர்ச்சியில் கலக்கிய ரீமாசென், தற்போது குடும்பப்பாங்கான உடையில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.