ரூ.500க்கு 4ஜி வோல்ட் இ போன்; ஜியோவின் அடுத்த ஆஃபர்

  • IndiaGlitz, [Wednesday,July 05 2017]

இந்திய தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. 2ஜி சேவையை மட்டுமே பயன்படுத்திய வந்த இந்திய மக்களை திடீரென 4ஜிக்கு மாற்றிய பெருமை இந்த நிறுவனத்திற்கு உண்டு.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஜியோ நிறுவனத்திற்கு தற்போது 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் ஜியோவின் கோடை ஆஃபர் இம்மாதம் முடிவடைய உள்ள நிலையில் புதிய ஆஃபர் ஒன்றை ஜியோ இம்மாதம் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள 2ஜி, 3ஜி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரூ.500க்கு '4ஜி வோல்ட் இ' போன் விற்பனை செய்யும் திட்டத்தை ஜியோ தொடங்கவுள்ளதாகவும், இந்த புதிய போன் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும்பாலான பிரீபெயிட் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்தியாவில் ஜியோ மட்டுமே 4ஜி வோல்ட்இ நெட்வொர்க் வைத்துள்ளது என்பதும் மற்ற போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா ஆகியவை வோல்ட்இ நெட்வொர்க்கில் வோல்ட்இ சேவையை சோதனை செய்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்குத்தான் ஆபத்து: சுப்பிரமணியம் சுவாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தபோது அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக பேசினார். இந்த பேச்சு தமிழக அரசியலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கோலிவுட்டின் கருணை உள்ளத்தால் 'காதல்' விருச்சிககாந்துக்கு குவியும் பட வாய்ப்புகள்

பாலாஜி சக்திவேல் இயக்கிய 'காதல்' படத்தில் நடித்த 'விருச்சிககாந்த் என்ற பாபு' சினிமா வாய்ப்பு இலலாத நிலையில் கோவிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்தார் என்பதையும் அவரை சமீபத்தில் தீனா மற்றும் மோகன் ஆகியோர் மீட்டு அவருக்கு தேவையான அடிப்படை தேவைகளை வழங்கி உதவி செய்தனர் என்பதையும் நாம் ஏற்கனவே பார்த்தோம்...

கேளிக்கை வரி குறித்து தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஜிஎஸ்டி வரி 28% மற்றும் தமிழக அரசின் வரி 30% என மொத்தம் 58% வரியை திரைத்துறையினர் கட்ட வேண்டிய நிலை உள்ளது...

செளந்தர்யா ரஜினி விவாகரத்து வழக்கில் அதிரடி தீர்ப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகளும், 'விஐபி 2' படத்தின் இயக்குனருமான செளந்தர்யா, கணவர் அஸ்வினுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிய முடிவு செய்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்....

மனைவி புகார் எதிரொலி: தாடி பாலாஜி மீது கொலைமிரட்டல் வழக்கு

கடந்த சில மாதங்களாகவே காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்துவேறுபாடு இருந்த நிலையில் கடந்த மே மாதம் 23 ந்தேதி மாதவரம் போலீசில் புகார் நித்யா புகார் ஒன்றை அளித்தார்.