கொரோனா சிகிச்சையில் வெற்றிபெற்ற Remdesivir!!! மருந்து தயாரிப்பில் இந்தியா முதற்கட்ட வெற்றி!!!

  • IndiaGlitz, [Tuesday,May 05 2020]

 

கடந்த மாதத்தில் அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் Remdesivir மருந்தின் மீதான சோதனையில் வெற்றிப் பெற்றிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சையில் Remdesivir மருந்து கொடுக்கும்போது அவர்கள் நல்ல பலனை பெறுவதாகவும் குறைந்த நாட்களிலேயே வீடு திரும்புவதாகவும் அந்தப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.

அடிப்படையில் கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் சென்று தன்னைப் போல பல்லாயிரக்கணக்கான பிரதிகளை எடுப்பதற்கு அடினோசைன் ட்ரைபாஸ்பேட் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்துகிறது. இந்த வேதிப்பொருளை ஒத்த தன்மையைக்கொண்ட Remdesivir மருந்தை மனித செல்லுக்குள் புகுத்திவிட்டால் கொரோனா வைரஸ் குழம்பி நிலைக்குலைந்து செயலிழந்துவிடும். கொரோனா நாவல் வைரஸ்க்குமுன் Remdesivir மருந்து கொரோனா வைரஸின் மற்ற வைரஸ் தொற்றுகளின்போதும் நல்ல பலனை அளித்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது இந்தியா, கொரோனா நோயாளிகளுக்கு ஆபத்தான கட்டத்தில் உதவும் இந்த மருந்தை தயாரிப்பதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. KSMS எனப்படும் இந்த மருந்துக்கான முக்கிய வேதிப் பொருள்களை ஐதராபாத்தில் உள்ள Indian Institute of Chemical Technology விஞ்ஞானிகள் வெற்றிகரமாக தொகுத்திருக்கிறார்கள். மேலும் இந்த மருந்தை தயாரிப்பதற்கான காப்புரிமை சிகாகோவின் Gilead Sciences யிடம் மட்டுமே இருப்பதால் அப்பல்லைக்கழகத்திடம் உரிமை கோரவும் இந்தியா முடிவு செய்திருக்கிறது. ஒருவேளை உரிமை கிடைக்காத பட்சத்தில் கட்டாய உரிமை பெறும் சட்டத்தின்கீழ் இந்த மருந்து உற்பத்தி செய்யப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கொரோனா சிகிச்சையில் Remdesivir பயன்படுத்திய 125 நோயாளிகளில் 113 பேர் நல்ல முறையில் குணமடைந்தனர் என்று சிகாகோ பல்கலைக்கழகம் தெரிவித்து இருந்தது. இதையடுத்துப் பல உலகநாடுகளும் கொரோனா சிகிச்சைக்கு Remdesivir மருந்தை பயன்படுத்துவது பற்றிய ஆய்வை மேற்கொண்டன. சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 237 கொரோனா நோயாளிகளுக்கு ஒரு மாதம் Remdesivir மருந்து செலுத்தப்பட்டது. சிலருக்கு Remdesivir மருந்தின் மாதிரியும் செலுத்தப்பட்டன. முடிவில் இதன் நல்ல பலனை தரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

சீனாவில் Remdesivir மருந்து செலுத்தப்பட்டவர்களில் 13.9% பேரும், அதன்மாதிரி செலுத்தப்பட்டவர்களில் 12.8% பேரும் மரணத்தை தழுவினர். மேலும், பலருக்கு பக்க விளைவுகளும் ஏற்பட்டது. எனவே சிகாகோ Gilead Sciences பல்கலைக்கழகம் WHO விற்கு தவறான முடிவினை அளித்து விட்டதாக சீன விஞ்ஞானிகள் குற்றம் சாட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய முரண்பட்ட ஆய்வுமுடிவுகள் இருந்தாலும் இவையனைத்தும் பகுதி அளவு முடிவுகள் மட்டுமே என்பதையும் விஞ்ஞானிகள் தெளிவுபடுத்துகின்றனர். கொரோனா சிகிச்சைக்கு தற்போதும் சில விஞ்ஞானிகள் Remdesivir மருந்தை பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவும் Remdesivir மருந்தின்மீது ஆர்வம் காட்டிவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்: முதல்வருக்கு விஜயகாந்த் அறிவுரை

வரும் 7ஆம் தேதி முதல் தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரிகள் திறப்பது குறித்த மத்திய அமைச்சரின் அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட பல தேர்வுகள் பள்ளி அளவில் நடை பெறவில்லை

மாதவரம் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா! பாலுக்கு தட்டுப்பாடு வருமா?

உலகெங்கிலும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது என்பதும், லட்சக்கணக்கான உயிர்களையும் பலியாக்கி வருகிறது என்பதும் தெரிந்ததே.

டுவிட்டரில் இணைந்த பழம்பெரும் காமெடி நடிகர்

உலகம் முழுவதும் உள்ள நடிகர், நடிகைகள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இணைந்து தங்களது ரசிகர்களுக்கு அவ்வப்போது தகவல்களை அளித்து வருகின்றனர்.

கொரொனோ கிடக்கட்டும், இதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிங்கய்யா! விஜய்சேதுபதியின் நக்கல் டுவீட்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் வேலைக்கு செல்லாமல் பசியால் வாடுகின்றனர்.