கொரோனாவுக்கு Remdesivir சிகிச்சை: மருத்துவமனையில் தங்கும் நாட்களை 31% ஆக குறைந்துள்ளது!!!

  • IndiaGlitz, [Saturday,May 16 2020]

 

கொரோனா சிகிச்சையில் Remdesivir மருந்து பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. முதன் முதலில் அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு எதிராக இந்த மருந்தை பயன்படுத்தி நல்ல பலனைப் பெற்றதாகக் கூறப்பட்டது. கொரோனாவுக்கு எதிராக இந்த மருந்து மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது எனவும் குறைந்த நாட்களிலேயே நோயாளிகள் வீட்டுக்கு திரும்புவதாகவும் கூறப்பட்டது. கொரோனா நோயாளிகள் மற்ற சிகிச்சையில் 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டுமென்றால் Remdesivir மருந்தை எடுத்துக் கொண்ட நோயாளிகள் 10 நாட்களிலேயே வீடு திரும்பலாம் எனக் கூறப்பட்டது.

கொரோனா நோய் சிகிச்சைக்கு இதுவரை குறிப்பிடத்தக்க மருந்தோ அல்லது தடுப்பூசிகளோ கண்டுபிடிக்காத நிலையில் Remdesivir மருந்து விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (NIH) இந்த மருந்து சிகிச்சையால் கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் விகிதம் 31% ஆக குறைந்து இருக்கிறது என அறிக்கை வெளியிட்டு உள்ளது. கடந்த மே 1 ஆம் தேதி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) கொரோனா சிகிச்சைக்கு வழங்கப்படும் மருந்து பட்டியலில் Remdesivir மருந்தை சேர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 8 ஆயிரம் கொரோனா நோயாளிகளுக்கு இதுவரை இந்த மருந்து கொடுக்கப் பட்டுள்ளது. அவர்களில் வயது காரணமாக ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவருக்கும் இந்த மருந்து சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

முடக்குவாதத்திற்கு வாதத்தில் நோய்க் கிருமியை குழப்பும் தன்மைக்கு இந்த மருந்து பயன்படுத்தப் படுகிறது. இந்நிலையில் கொரோன நோயாளிகளைத் தவிர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதுமான வரை இந்த மருந்து இருப்பு வைக்கப் பட்டுள்ளதாகவும் அமெரிக்க தேசிய சுகாதாரத் துறை அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா சிகிச்சை மருந்து குறித்த பரிந்துரைக்கு எலி லில்லி நிறுவனம் கண்டுபிடித்த வீக்கத்துக்கான ஒலுமியண்ட் மற்றும் Remdesivir ஆகியவை எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் தற்போது Remdesivir அதிக வரவேற்றை பெற்றிருக்கிறது.

அதையடுத்து Gilead Sciences மருந்து தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. அடிப்படையில் கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் சென்று தன்னைப் போல பல்லாயிரக்கணக்கான பிரதிகளை எடுப்பதற்கு அடினோசைன் ட்ரைபாஸ்பேட் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்துகிறது. இந்த வேதிப்பொருளை ஒத்த தன்மையைக்கொண்ட Remdesivir மருந்தை மனித செல்லுக்குள் புகுத்திவிட்டால் கொரோனா வைரஸ் குழம்பி நிலைக்குலைந்து பின்பு செயலிழந்து விடும். இதற்குமுன், இந்த Remdesivir மருந்து கொரோனா வைரஸின் மற்ற வைரஸ் தொற்றுகளின் போதும் நல்ல பலனை அளித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தியாவிலும் இந்த மருந்தை உற்பத்தி செய்வதற்கான காப்புரிமை பெறப்பட்டு இருக்கிறது.

More News

குரங்குகளிடம் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை!!! நம்பிக்கை அளிக்கும் ஆய்வு முடிவு!!!

கொரோனா தடுப்பூசி குறித்து உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

கடும் சர்ச்சையில் கொரோனா நிவாரண நிதியை வாரிக்கொடுத்த பில்கேட்ஸ்!!! காரணம் என்ன???

பேஃர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கும் தரவுகளின் படி உலகில் அதிக கொரோனா நன்கொடை நிதியை வழங்கிய இரண்டாவது நபர் பில்கேட்ஸ்.

ஊழியர்களுக்கு சம்பளம் தரவில்லையா? பிரபல திரையரங்க நிர்வாகம் விளக்கம்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடந்த இரண்டு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.

மகளின் ஆபாச படத்தை காட்டி அம்மாவையும் மிரட்டி பணிய வைத்த காசி: திடுக்கிடும் தகவல்

கல்லூரி மாணவிகள் உள்பட பல பெண்களை மிரட்டி தனது காம இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்ட நாகர்கோவில் காசி மீது பெண் டாக்டர் ஒருவரும் கல்லூரி மாணவிகள் சிலரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் சமீபத்தில் கைது

ஒரு மணி நேரத்தில் கலர் ஜெராக்ஸ் போலி டோக்கன்கள்: மதுப்பிரியர்கள் கைது

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் மே 7-ஆம் தேதி திறக்கப்பட்டது. மே 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 300 கோடி ரூபாய்க்கு மது பாட்டில்கள்