close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரிட்டன் பெண் தொழிலதிபர்!

Wednesday, September 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

ஷகிலாவின் மகள் மிளா, விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, நடிகை பிரியாராமன், டிக்டாக் புகழ் ஜிபி முத்து, குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி உள்பட ஒருசில போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உறுதி செய்யப்பட்டதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் ரேணுகா பிரவீன் அவர்களும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தென்னிந்தியாவின் முதல் கண்கள் சம்பந்தப்பட்ட பியூட்டி பார்லரை சென்னை நுங்கம்பாக்கத்தில் தொடங்கி நடத்தி வரும் ரேணுகாவின் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களாக பல திரையுலக பிரபலங்கள் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வெளிநாட்டு தமிழர் ஒருவர் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரேணுகா பிரவீன் கலந்துகொள்ள இருக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.