ரூ.100 நோட்டுக்கும் ஆபத்தா? ரிசர்வ் வங்கி விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,February 04 2017]

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விரைவில் புதிய ரூ.100 நோட்டுக்களை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா? என்ற அச்சத்துடன் பலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்டு வரும் நிலையில் பழைய 100 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என்றும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
மேலும் புதிய 100 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படத்துடன் 'R' என்ற எழுத்து அச்சிடப்பட்டிருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கையெழுத்து மற்றும் 2017 என ஆண்டும் அதில் இடம்பெறும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

பிரபுதேவாவுடன் மீண்டும் இணையும் ஆர்ஜே பாலாஜி

இயக்குனர் விஜய் இயக்கிய 'தேவி' படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்த நடித்த ஆர்ஜே பாலாஜி, மீண்டும் ஒரு படத்தில் அவருடன் இணைகிறார். அந்த படம் தான் 'யங் மங் சங்'...

கமல் பட டைட்டில் வைத்த சிபிராஜூக்கு கமல் பாராட்டு

சத்யராஜ் மகனும் நடிகருமான சிபிராஜ் தற்போது 'சைத்தான்' இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளியாகியுள்ளது...

நான் முதலில் மனிதன். அப்புறம்தான் 'இந்தியன்'. கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக சமூக கருத்துக்களை அதிகம் தனது சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவர் தெரிவித்த நியாயமான கருத்துக்கள், காவல்துறையின் வன்முறைக்கு அவர் தெரிவித்த கண்டனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

இது கே.வி.ஆனந்தின் மற்றொரு 'கோ'வம். கபிலன் வைரமுத்து

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்'; திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

பீட்டாவுக்கு விஜயகாந்தின் சாட்டையடி கேள்வி.

சென்னை எண்ணூரில் இரண்டு கப்பல்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஏராளமான கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதனால் மீனவர்கள் மட்டுமின்றி மீன் உள்பட லட்சக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது