ஹிந்தி தெரியாதா… அப்ப லோன் இல்ல… வங்கி மேலாளரின் செயலால் அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!!!

  • IndiaGlitz, [Tuesday,September 22 2020]

 

அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டத்தில் அரசு தலைமை மருத்துராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பாலசுப்பிரமணியம். இவர் கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் உள்ள IOB வங்கியில் கடன் பெறுவதற்கு விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக தனது வரவு செலவு கணக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வங்கி மேலாளரிடம் சமர்ப்பித்து இருக்கிறார்.

ஆனால் வரவு செலவு விவரங்களைப் பார்க்காத வங்கி மேலாளர் உங்களுக்கு ஹிந்தி தெரியுமா என்ற கேள்வியைக் கேட்டு லோன் தர மறுத்து இருக்கிறார். இந்த விவகாரம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. “Do u know hindi” எனக் கேட்ட வங்கி மேலாளருக்கு பாலசுப்பிரமணியம், “I don’t Know hindi, But I Know Tamil and English” எனப் பதில் அளித்ததாகத் தெரிவித்து இருக்கிறார். ஆனால் தொடர்ந்து பேசிய வங்கி மேலாளர் “I am from Maharashtra, I know Hindi, Langugage problem” எனக்கூறி லோன் குறித்த விண்ணப்பத்தை பார்க்கக்கூட மறுத்து இருக்கிறார். மேலும் மொழி பற்றிய தனது கருத்தை மட்டுமே திரும்ப திரும்ப கூறியதாகவும் பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டு உள்ளார்.

இதனால் அதிர்ந்து போன ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் “மொழி பற்றிய உணர்வை கிளறிவிட்டு தனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக” வங்கி மேலாளருக்கு சம்மனையும் அனுப்பி உள்ளார். மேலும் இந்த விவகாரத்தைக் குறித்து நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

மேலும் கங்கை முதல் கடாரம் வரை சென்று போரிட்டு வெற்றி பெற்ற இராசேந்திர சோழனின் தலைநகராக விளங்கிய கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹிந்தி தெரியாது என்ற காரணத்தினால் கடன் கிடையாது என மேலாளர் தெரிவித்தது தன்னை மிகவும் வேதனை படுத்தியதாக ஓய்வு பெற்ற தலைமை மருத்துவர் வருத்ததுடன் தனதுகருத்தை பதிவு செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

குழந்தையின் சிகிச்சைக்காக இதயத்தை விற்க முன்வந்த தாய்! அதிர்ச்சி அறிவிப்பு

கொச்சியை சேர்ந்த ஒரு பெண் தனது குழந்தையின் சிகிச்சைக்காகவும், வாங்கிய கடனை அடைப்பதற்காகவும் தனது இதயம் உள்பட அனைத்து உடல் உறுப்புகளையும் விற்க முன்வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை – ராஜஸ்தான் போட்டி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய நான்காவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

வாடிவாசலுக்கு முன்பே சூர்யாவுடன் இணையும் பிரபல இயக்குனர்!

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாக உள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் ஹரி இயக்கும் 'அருவா' என்று கூறப்பட்டது.

மிஷ்கினுக்கு டைட்டில் உதவி செய்த பாலா!

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே 

திருமண ஆசைக்காட்டி இளைஞரிடம் 7 லட்சம் மோசடி… பரபரப்பான பின்னணி!!!

பெங்களூர் அடுத்த மாரத்தஹள்ளி பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்த இளைஞர் ஒருவரிடம் இளம்பெண் ஒருவர் திருமண ஆசைக்காட்டி பண மோசடியில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது