close
Choose your channels

கமல்ஹாசனுடன் 27 வருடங்கள் கழித்து நடிக்கும் நடிகை!

Friday, November 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான ’தலைவன் இருக்கின்றான்’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன

கடந்த 1992 ஆம் ஆண்டு கமலஹாசன், ரேவதி, கவுதமி, நாசர் நடிப்பில் உருவான ’தேவர் மகன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் படம் ’தலைவன் இருக்கின்றான்’ படத்தில் தேவர் மகன் படத்தில் நடித்த ஒரு சில நடிகர் நடிகைகள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக தேவர் மகன் படத்தில் நடித்த வடிவேலு இந்த படத்திலும் ஒரு கை இல்லாதவராக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தேவர் மகன் படத்தில் கமல்ஹாசன் மனைவியாக நடித்த ரேவதி இந்த படத்திலும் அதே கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 27 வருடங்கள் கழித்து மீண்டும் கமலுடன் ரேவதி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தேவர் மகன் படத்தில் இன்னொரு நாயகியாக நடித்த ‘கவுதமி’ இந்த படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது இதற்குரிய பதிலை படக்குழுவினர் விரைவில் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.