அம்மா.. உண்மையை தைரியமா சொல்லும்மா: அதிரடி காட்டிய ரேவதியின் மூத்த மகள்

  • IndiaGlitz, [Thursday,July 02 2020]

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு பெரும் பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக தலைமை காவலர் ரேவதியின் சாட்சியம் கருதப்படும் நிலையில் அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஏற்கனவே மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது என்பதும் அவருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ரேவதியின் கணவர் அளித்த பேட்டியின் போது ’இரவு 10 மணி அளவில் தொலைபேசியில் என்னிடம் பேசிய எனது மனைவி ’தந்தை மகன் ஆகிய இருவரையும் போலீசார் அடித்து கொண்டிருப்பதாக கூறினார். ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ் எனது மனைவி தண்ணீர் கேட்டதாக எனது மனைவி வருத்தத்துடன் கூறினார்

மேலும் நள்ளிரவு இருவரையும் மீண்டும் அடித்துக் கொண்டிருந்தார்கள் என்றும் கூறிய ரேவதி என்னிடம் கூறினார். சம்பவம் நடந்தபோது தான் பணியில் இருந்ததால் தனக்கும் சிக்கல் வரும் என்று ரேவதி என்னிடம் போனில் வருத்தப்பட்டபோது அவருக்கு நான் ஆறுதல் கூறினேன்

மேலும் போலீசாரால் அடிக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் இறந்து விட்டார்கள் என்ற செய்தியைக் கேட்டு எனது மனைவி மிகவும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இந்த வழக்கு குறித்து சாட்சி அளிக்க எனது மனைவி சென்ற போது எனது மூத்த மகள், ‘அம்மா தைரியமாக உண்மையை சொல்லும்மா என்று கூறினார். இந்த வழக்கு குறித்தும் உண்மையில் போலீஸ் ஸ்டேஷனில் என்ன நடந்தது என்பது குறித்தும் எனது மூத்த மகளுக்கு தெரியாது என்றாலும் அவர் தனது தாயாருக்கு தைரியம் கூறியதாகவும் ரேவதியின் கணவர் கூறினார்

மேலும் இந்த வழக்கில் எங்கு வேண்டுமானாலும் தனது மனைவி உண்மையை சொல்ல தயாராக இருக்கிறார் என்றும் ஆனால் அதே நேரத்தில் அவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ரேவதியின் கணவரின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

தலைமை காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மதுரை ஐகோர்ட் உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் காப்பாற்றப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக சிபிசிஐடி இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்

பிக்பாஸ் ஜூலிக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா?

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் பகுதியில் ஜல்லிக்கட்டு போராட்ட வீராங்கனை ஜூலி பங்கேற்றிருந்தார் என்பது தெரிந்ததே. ஆரம்பத்தில் சில வாரங்கள் ஜூலிக்கு ரசிகர்கள்

சாத்தான்குளம் வழக்கில் திடீர் திருப்பம்: அப்ரூவராக மாறும் அதிகாரிகள்

சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை

என் அப்பா ஒரு குடிகாரர், வனிதா சொல்வதில் உண்மை இல்லை: பீட்டர்பால் மகன்

சமீபத்தில் வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் நடந்து அதன் பின்னர் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி தனது கணவர் குடிகாரர் என்றும்

ஒருவழியா கண்டுபிடிச்சாச்சு... சீனாவில் பன்றிகளிடம் பரவும் புதிய வைரஸ் என்ன தெரியுமா??? விஞ்ஞானிகள் தகவல்!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவில் பன்றிகளிடம் ஒரு புதிய தொற்று பரவி வருவதாகப் பரபரப்பு ஏற்பட்டது