close
Choose your channels

பணியில் இருந்த பெண் தாசில்தாரை உயிரோடு கொளுத்திய விவசாயி: பெரும் பரபரப்பு

Monday, November 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கானா மாநிலத்தில் பணியில் இருந்த பெண் தாசில்தார் ஒருவரை விவசாயி ஒருவர் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அப்துல்லாபூர்ரெட் என்ற பகுதியில் விஜயா ரெட்டி என்ற பெண், தாசில்தார் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரை பார்க்க சுரேஷ் ஒரு விவசாயி அடிக்கடி வந்து கொண்டிருந்தார். அவர் நில விவகாரம் தொடர்பாக விஜயா ரெட்டியை பார்க்க வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் இன்றும் அதே போல் பெண் தாசில்தாரை பார்க்க சுரேஷ் அவருடைய அறைக்கு சென்று உள்ளார். சிறிது நேரத்தில் அந்த அறையிலிருந்து அய்யோ அம்மா என்னை காப்பாற்றுங்கள் என்ற அலறல் சத்தம் கேட்டு, அந்த அலுவலகத்தில் இருந்தவர்கள் உள்ளே போய் பார்த்தபோது, பெண் தாசில்தார் உயிரோடு எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் வரும் முன்னரே அங்கு உள்ள ஊழியர்கள் தாசில்தார் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்தப் பெண் பெண் தாசில்தார் விஜயா ரெட்டி மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தாசில்தாரை உயிரோடு கொளுத்திய சுரேஷ் என்ற விவசாயி தானாகவே காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. முதல்கட்ட விசாரணையில் பெண் தாசில்தார் லஞ்சம் கேட்டதால் அவரை உயிரோடு கொளுத்தியதாக சுரேஷ் கூறியதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.