close
Choose your channels

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகர்!

Tuesday, December 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஏற்கனவே இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் இணைந்து உள்ளனர் என்ற செய்தியை பார்த்து வருகிறோம். இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய், பூங்குழலி கேரக்டரில் ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தரசோழர் கேரக்டரில் சரத்குமார் மற்றும் பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், ஜெயராம், லால், அஸ்வின் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் ரியாஸ்கான். இந்த தகவலை ரியாஸ்கானின் மனைவியும் நடிகையுமான உமா ரியாஸ்கான் உறுதி செய்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில் ரியாஸ்கான் இணைந்து இருப்பது உண்மைதான் என்றும் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் ரியாஸ்கான் நடிப்பது இதுதான் முதல்முறை என்றும் அவருக்கு இந்த படத்தில் முக்கிய கேரக்டர் என்றும் பெரும்பாலான காட்சிகளில் அவர் கிஷோர் உடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜனவரி 7ஆம் தேதி முதல் ரியாஸ்கான் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் உமா ரியாஸ்கான் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரவிவர்மான் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.