ரூ.3 கோடி வரி பாக்கி… ஆட்டோ ஓட்டுநருக்கு வந்த நோட்டீஸால் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Tuesday,October 26 2021]

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.3 கோடி வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்திலுள்ள பகல்பூரில் வசித்து வருபவர் பிரதாப் சிங். இவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் தொழில் செய்துவருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வருவமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதில் ரூ.3,47,54,896 வரி நிலுவையில் இருப்பதாகவும் அந்த வரித்தொகையை உடனடியாகச் செலுத்தும்படியும் அறிவுறுத்தப் பட்டிருக்கிறது.

இதையடுத்து அதிர்ந்துபோன பிரதாப் சிங் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை செய்த அதிகாரிகள் பிரதாப் சிங், பான் கார்டுக்கு விண்ணப்பித்தப்போது நகல் செய்யப்பட்ட அட்டையை அனுப்பி வைத்துவிட்டு உண்மையான கார்டை கொண்டு ஜிஎஸடி எண் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் அந்த மோசடி நபர், பிரதாப் சிங்கின் பான் கார்ட் மற்றும் ஜிஎஸ்டி எண்ணை வைத்து கடந்த ரூ.2018-2019 வாக்கில் ரூ.43,44,36,201 மதிப்பிலான வணிகத்தைச் செய்துள்ளார். அதற்கான வருமான வரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதால் தற்போது பிரதாப் சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதையடுத்து மோசடி நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினியை 'தலைவா' என அழைத்து வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் பிரபலம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று திரை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து பல அரசியல் பிரபலங்கள், திரை உலக பிரபலங்கள்,

விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்த சமந்தா!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நடிகை சமந்தா இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து

'டாக்டர்' திரைப்படத்தின் வசூல் இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் திரையுலகம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் உருவாக்கிய 'டாக்டர்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

வேற லெவல் குத்துப்பாட்டை எழுதினாரா கமல்ஹாசன்? 

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 

ரஜினியை கிண்டல் செய்ய நினைத்து சிக்கலில் மாட்டிய பிரபல இயக்குனர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அளிக்கப்பட்டது என்பதும், இதனை அடுத்து ரஜினிகாந்த் அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்