சுயஇன்பத்தால் மூளையில் ரத்தக்கசிவு? பகீர் ஏற்படுத்தும் உண்மைச் சம்பவம்!

  • IndiaGlitz, [Monday,July 26 2021]

ஜப்பான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர், தினமும் பலமுறை சுயஇன்பம் அனுபவிப்பதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். இதனால் அவரது மூளையில் இரத்தக்கசிவு பாதிப்பு ஏற்பட்டு தற்போது உயிரிழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஜப்பானில் வசித்து வந்த 51 வயதாகும் ஒருவர், தினமும் பலமுறை சுயஇன்பம் அனுபவிக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார். இதனால் அவ்வபோது சிறு தலைவலி மற்றும் வாந்தி வருவது போன்ற உணர்வுகள் அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது. திருமணம் ஆகாத அவர் முதலில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் இதுகுறித்து தன்னுடைய நண்பர்களிடம் கலந்து பேசவும் தயங்கி இருக்கிறார்.

தலைவலி, வாந்தி, பார்வை குறைபாடு போன்ற பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கிறது. ஆனாலும் சுயஇன்பப் பழக்கதை விடமுடியாமல் அவர் திணறி இருக்கிறார். அதோடு தனது பிரச்சனைக்கு காரணம் சுயஇன்பப் பழக்கம்தான் என்பதையும் உணர்ந்து இருக்கிறார். மேலும் இதுகுறித்து பேசத் தயங்கிய அவர் ஒருவழியாக Nagoya பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் இவரை பரிசோதித்து உள்ளனர்.

அப்போதுதான் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து உள்ளனர். மேலும் சுயஇன்பம் அனுபவிக்கும் ஒவ்வொரு முறையும் சிறிய அளவில் அந்த நபருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஒவ்வொரு முறையும் வாந்தி, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறது.

நாளுக்கு நாள் அதிகரித்த இந்த நோய் பாதிப்பு ஒருகட்டத்தில் இருமும்போது மற்றும் கழிவறைக்குச் செல்லும்போதுகூட இரத்தக்கசிவு பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து எச்சரித்த மருத்துவர்கள் அந்த நபருக்கு செரிப்ரோவேஸ்குலோர் (cerebrovascular Diseases) எனும் நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் மூளையில் அடிக்கடி இரத்தக்கசிவு ஏற்படுவதால் உயிரைப் பறிக்கும் பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இரண்டு வார சிகிச்சைக்குப் பின்பு தற்போது அந்த நபர் நல்ல உடல்நிலையுடன் வீடு திரும்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஹிப் பாப் ஆதியின் யுடியூப் பக்கத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள்....!

இசையமைப்பாளர் ஹிப் பாப் ஆதியின், யுடியூப் பக்கத்தை முகம் தெரியாத மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர்.

கார் விபத்து எதிரொலி: யாஷிகா மீது போலீஸ் எடுத்த அடுத்த அதிரடி நடவடிக்கை!

நடிகை யாஷிகா தனது தோழி மற்றும் நண்பர்களுடன் சென்ற கார் நேற்று முன்தினம் நள்ளிரவில் விபத்துக்குள்ளானதில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பதும், யாஷிகாவும் அவரது இரண்டு ஆண்

செல்போன் வேவு பார்க்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு… பெகாசஸ் வெளியிட்ட அதிரடி பதில்!

பெகாசஸ் உளவுக் கருவிகள் உள்ளதால்தான் உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சாலைகளில் சுதந்திரமாக நடமாடுவதாக அதனைத் தயாரித்த

காதலித்ததால் ஆண் உறுப்பு அறுக்கப்பட்ட இளைஞர்… வன்முறையில் முடிந்த சம்பவம்!

பீகார் மாநிலத்தில் தன் வீட்டு பெண்ணை காதலித்த 18 வயது இளைஞர் ஒருவரை ஆணுறுப்பை சிதைத்து கொலை செய்துள்ளனர்.

பா ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்: 'சார்பாட்டா பரம்பரை' படம் குறித்து நடிகர் நாசர்!

சமீபத்தில் வெளியான பா ரஞ்சித் இயக்கிய 'சார்பாட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை திரை உலக பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பாராட்டி வருகின்றனர்.