டிக்கெட் டு ஃபினாலே இவருக்குத்தானா? மீண்டும் ஆரிக்கு ஏமாற்றம்!

பிக்பாஸ் வீட்டில் தற்போது ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக நடந்த நான்கு சுற்று போட்டிகளில் ரம்யா 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இதனை அடுத்து ஷிவானி மற்றும் ரியோ ஆகிய இருவரும் 19 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று ஐந்தாம் சுற்று டாஸ்க் நடைபெறும் காட்சிகள் முதல் புரமோ வீடியோவில் உள்ளன. இதில் வளையத்தில் உள்ள பந்து கீழே விழாமல் சுற்ற வேண்டும் என்பதுதான் டாஸ்க். போட்டியாளர்கள் அனைவரும் டாஸ்க்கில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வழக்கம்போல ஆரி முதலாவதாக அவுட் ஆகி விடுகிறார். அவரை அடுத்து ரம்யா மற்றும் ஷிவானி அவுட் ஆகி விடுகிறார்கள் .

நான்காவதாக கேபியும், ஐந்தாவதாக சோம் அவுட் ஆக, ரியோ மற்றும் பாலாஜி தாக்குப்பிடித்து விளையாடுகின்றனர். இதில் ஆறாவதாக பாலாஜியும் அவுட்டாக ரியோ இந்த சுற்றில் முதலிடத்தை பிடித்து ஏழு புள்ளிகளை பெற்றுள்ளார். ஏற்கனவே அவர் 19 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் தற்போது 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

பாலாஜி அல்லது ரம்யா இரண்டாவது இடத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஐந்து சுற்றுகளுடன் டாஸ்க் முடிவடைந்தால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு ரியோ தகுதி பெற்றவராக அறிவிக்கப்படுவார். ஒருவேளை இன்னும் சுற்றுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை வரும் புரமோ வீடியோக்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

குடிமகன்களுக்கு வந்த புது சோதனை…  டாஸ்மாக்குக்கு 3 நாள் லீவா??? களைக்கட்டும் மீம்ஸ்!!!

ஒரே ஒரு நாள் டாஸ்மாக்கு லீவு விட்டாலும் குடிமகன்களின் பாடு திண்டாட்டமாகிவிடும். இந்நிலையில் இந்த ஜனவரி மாதம் மட்டும் தமிழக டாஸ்மாக்குக்கு 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட இருக்கிறது

சிம்புவின் 'பத்து தல' படத்தில் இணைந்த 'அசுரன்' நடிகர்!

சிம்புவின் அடுத்த படத்தின் டைட்டில் 'பத்து தல' என்றும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான 'முஃப்தி' என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் தெரிந்ததே.

கமல்ஹாசன் படத்தை கடுமையாக விமர்சனம் செய்த ஒரே ஒரு படம் இயக்கிய மாரி செல்வராஜ்!

கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' படத்தில் உள்ள குறையை நிகழ்ச்சி ஒன்றில் 'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

லேட்டா வந்த கோவம்: மூஞ்சில சூடான எண்ணெயை ஊற்றிய மனைவி 

வீட்டிற்கு தாமதமாக வந்த கணவனை கேள்வி கேட்ட மனைவி தனது கேள்விக்கு சரியான பதில் வராததால் ஆத்திரமடைந்த மனைவி கணவனுடைய முகத்தில் சூடான எண்ணையை ஊற்றிய சம்பவம்

ஆரி, சனம் குறித்து முதல்முறையாக மனம்திறந்த அனிதாவின் கருத்துக்கள்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் கிட்டத்தட்ட அனைவருமே ஆரியுடன் சண்டை போட்டதால் தான் வெளியேற்றப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டிருக்கின்றன.