close
Choose your channels

'தி லெஜண்ட்' நாயகியை வச்சு செய்யும் ரிஷப் பண்ட் ரசிகர்கள்: இதுதான் காரணம்!

Friday, August 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் ரிஷப் பண்ட் ரசிகர்கள் நடிகை ஊர்வசி ரெளட்டாலாவை சமூகவலைதளத்தில் வச்சு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான ’தி லெஜன்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஊர்வசி ரெளட்டாலா, பாலிவுட்டில் பிரபல நடிகையாக உள்ளார் என்பது தெரிந்ததே. அவரது கவர்ச்சியான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் சமூக வலைதளங்களிலும் அவர் ஆக்டிவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்திருந்த ஊர்வசி, ‘கிரிக்கெட் வீரர் ஒருவர் 12 மணி நேரம் தன்னை பார்ப்பதற்காக காத்திருந்ததாகவும் ஆனால் தான் தூங்கி எழுந்ததும் அவரை இப்போது பார்க்க முடியாது, மும்பை வந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என அனுப்பி விட்டதாகவும் ரிஷப் பண்ட் பெயரை குறிப்பிடாமல் பதிவு செய்திருந்தார்.

அதுமட்டுமின்றி இன்னொரு பதிவில், ‘தம்பி! போய் பந்து விளையாடு’ என்று கிண்டலாக பதிவு செய்தது ரிஷப் பண்ட் ரசிகர்களை கொந்தளித்து வைத்துள்ளது. கிரிக்கெட் விளையாடும் போது அவர் மூன்று பந்துகளுக்கு கூட வெயிட் பண்ணாமல் சிக்சர் அடிக்க கூடியவர் என்றும் உனக்காக 12 மணி நேரம் காத்திருந்தார் என்பது முழுக்க முழுக்க பொய் என்றும் அவரை திட்டி வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் பேட்டியளித்த ஊர்வசி, ‘எனக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இல்லை என்றும் எந்த கிரிக்கெட் வீரரையும் தனக்கு பிடிக்காது என்றும் கூறியதும் ரிஷப் பண்ட்டை மனதில் வைத்துதான் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து ரிஷப் ரசிகர்கள், ஊர்வசி ரெளட்டாலாவை வச்சு செய்து வருகின்றனர். மொத்தத்தில் சமூக வலைத்தளத்தில் ரிஷப் பண்ட் மற்றும் ஊர்வசியின் ரசிகர்கள் மோதிக் கொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.