ரிஷிகபூரின் இறுதி சடங்கிற்காக 1400 கிமீ பயணம் செய்யும் மகள்!

உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமான பிரபல பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் இறுதிசடங்கில் கலந்து கொள்வதற்காக அவரது மகள் டெல்லியில் இருந்து மும்பைக்கு 1,400 கிலோ மீட்டர் பயணம் செய்ய உள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை பழம்பெரும் நடிகர் ரிஷிகபூரின் மகள் ரித்திமா, தொழிலதிபர் ஒருவரை மணந்து டெல்லியில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள விமானத்தில் பயணம் செய்த அவர் மத்திய அரசிடம் அனுமதி கேட்டதாக தெரிகிறது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் ரிஷிகபூரின் மகளுக்கு மட்டும் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் தனது உறவினர் 5 பேர்களுடன் மும்பைக்கு செல்ல வேண்டியிருப்பதாக கூறியதை அடுத்து அவருக்கு சாலை வழியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் ரிஷிகபூரின் மகள் தனது உறவினர்களுடன் 1400 கிலோ மீட்டர் டெல்லியில் இருந்து மும்பைக்கு கார் மூலம் பயணம் செய்து வருகிறார். அவர் சுமார் 18 மணி நேரம் பயணம் செய்வார் என்றும் இன்று இரவு அவர் மும்பையை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள 18 மணி நேரம் பயணம் செய்யும் ரிஷிகபூரின் மகள் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

இதுவரை கொரோனா பாதிக்காத நாடுகள்!!!

உலகையே படாய்ப் படுத்திவரும் கொரோனா ஒருசில நாடுகளில் மட்டும் தலைக் காட்டவில்லை

இந்தியா: ஊரடங்கில் 37 ஆவது நாளில் இருக்கிறோம்!!! நிலமை என்ன???

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது  இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக இந்தியச் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பூமிக்குக் கொடுத்த வரம்!!! Co2 வின் அளவு 8% குறைந்திருக்கிறது!!!

கொரோனாவின் தாக்கத்தினால் மனிதர்கள் அனைவரும் அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இயற்கையும், விலங்குகளும் இயல்பான நிலைமைக்குத் திரும்பியிருக்கின்றன.

சென்னையில் மட்டும் 138 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!

தமிழகத்தில் தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்று முன் தமிழகத்தில் இன்று மட்டும் 161 பேர்களுக்கு கொரோனா

2 டிரக் முழுவதும் அழுகிய உடல்கள்: நியூயார்க்கின் மோசமான நிலை

உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் மிக அதிகமாக உள்ளனர் என்றும் அந்நாட்டில் தான் கொரோனா வைரசால் மிக அதிக உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது