எல்லா வசதி இருந்தும் ஏன் வீட்ல இருக்க மாட்டேங்குறீங்க: ரித்விகா

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகை ரித்விகா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

இன்று முதல் 144 தடை உத்தரவு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் இன்னும் மக்கள் தெருக்களில் நடந்து கொண்டும் வாகனங்களில் சென்று கொண்டிருக்கின்றனர். இதன் சீரியஸ்னஸ் என்னவென்று இன்னும் பலருக்கும் புரியவில்லை. எங்களுக்கெல்லாம் கொரோனா வைரஸ் வராது என்று சிலர் அசட்டு தைரியத்தில் இருக்கின்றார்கள். அவர்களுக்காக இந்த வீடியோ.

தயவுசெய்து நீங்கள் வீட்டிலே இருக்கவேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் வீட்டில் இருப்பதால் உங்கள் வீட்டில் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு. 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை இருக்கும் இந்தியாவில் ஒரு லட்சம் பேர்களை மட்டுமே தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. இந்த வைரஸ் அட்டாக் செய்தவர்களை தனி அறையில் வைத்து மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். நீங்கள் வெளியே போய் கொரோனா வைரஸை பரப்பினால் எத்தனை பேரை தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க முடியும். எனவே தான் இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் சீரியஸை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் 

நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னையில் வெள்ளம் வந்தபோது 10 முதல் 15 நாட்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அப்போது மின்சாரம் இல்லை, போன் இல்லை, செல்போன் இல்லை, யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியாது.  ஆனால் தற்போது அப்படியில்லை. மின்சாரம் இருக்கிறது, டிவி இருக்கின்றது செல்போன் இருக்கின்றது, அனைத்து பொழுதுபோக்கும் இருக்கின்றது. எல்லா வசதிகளும் இருக்கும் போது ஏன் வீடுகளில் இருக்காமல் வெளியே சுற்றுகிறார்கள்? நீங்கள் வீட்டில் இருப்பதால் உங்கள் வீட்டு பெரியவர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் குழந்தைகளுக்கு மிகுந்த பாதுகாப்பு. எனவே தயவு செய்து அனைவரும் வீட்டில்  இருங்கள்’ என்று நடிகை ரித்விகா கூறியுள்ளார்.

More News

“ஹன்டா“ வைரஸின் அறிகுறிகள்!!! பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன???

சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. கொரோனாவின் கோரப்பிடியில்

கையெடுத்து கும்பிட்ட போலீஸ்: காலில் விழுந்து மரியாதை செலுத்திய சாமானியர்

கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருவதை அடுத்து நாட்டு மக்கள் அனைவரும் அடுத்த 21 நாட்களுக்கு வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று வேண்டுகோள் விடுத்தார்.

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு கார் கொடுத்து உதவிய தமிழ் நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை ரோஜா. இவர் தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி தொகுதி எம்.எல்.ஏஆகவும் உள்ளார்.

கொரோனா தாக்கியதால் சுவை, வாசனை திறனை இழந்த பிரபல பாடகர்: அதிர்ச்சி தகவல் 

உலகமெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸ் ஏழை முதல் பணக்காரர் வரை அனைத்து தரப்பினரையும்

கொரோனா பாதிப்பை மறைத்த தெலுங்கானா டிஎஸ்பி: மகனையும் தாக்கியதால் பரபரப்பு

தெலுங்கானா மாநில காவல்துறை டிஎஸ்பி ஒருவருக்கும் அவருடைய மகனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.