கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம் செய்த விஜய் பட நடிகை!

  • IndiaGlitz, [Thursday,July 02 2020]

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. இவர் அதன் பின்னர் விஜய் நடித்த ’வேலாயுதம்’ மற்றும் ’சச்சின்’ ஆகிய திரைப்படங்கள் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெனிலியா கடந்த 2012ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் மருத்துவர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் நடிகை ஜெனிலியாவும் அவரும் அவருடைய கணவரும் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இதுகுறித்து ஜெனிலியா தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

நீண்ட நாட்களாகவே நானும் எனது கணவரும் உடல் உறுப்பு தானம் குறித்து யோசித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அதற்கான நேரம் அமையாமல் இருந்தது. இந்த நிலையில் மருத்துவர் தினத்தில் எங்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளோம். அடுத்தவர்களுக்கு நாம் தரும் மிகப்பெரிய பரிசு நமது வாழ்க்கை தான். மற்ற உயிர்களை காப்பாற்ற இதுபோல் அனைவரும் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்’ என்று ஜெனிலியா கேட்டுக் கொண்டுள்ளார். ஜெனிலியா மற்றும் தேஷ்முக்கின் இந்த உடல் உறுப்பு தானம் அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது.

More News

தூத்துக்குடி: கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு!!!

தூத்துக்குடி மாவட்டம் கீழசெக்காரக்குடி பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்தனர்

சமந்தாவை ஸ்பைடர்மேன் லெவலுக்கு கொண்டு சென்ற ரசிகர்கள்!

திருமணத்திற்கு பின்னரும் மாஸ் நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகை சமந்தா, தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்

சாத்தான்குளம் கொலை வழக்கு: CBI க்கு ஏன் அத்தனை சிறப்பு??? CBI விசாரணையில் என்ன வித்தியாசம்???

சாத்தான் குளம் (ஜெயராஜ், பின்னிக்ஸ்) கொலை வழக்கு  விசாரணை தற்போது சி.பி.ஐ. க்கு மாற்றப் பட்டு இருக்கிறது

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடித்தே கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி: 29 வயது இளைஞர் கைது

பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமைகள் 'போக்சோ' சட்டம் போட்டு குறையாத நிலையில் தற்போது தமிழகத்தில் 7 வயது சிறுமியை 29 வயது கொடூரன் பாலியல் பலாத்காரம்

கொரோனா தொற்றால் அச்சம்: கோவை இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் ஒருபுறம் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டதால் அச்சமடைந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை