close
Choose your channels

திடீரென தூய்மையான கங்கை நீர்: எஸ்.ஆர்.பிரபு சுட்டிக்காட்டிய கட்டுரை

Saturday, April 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கங்கை தண்ணீரை தூய்மை செய்ய சமீபத்தில் மத்திய அரசு 7 ஆயிரம் கோடி செலவு செய்யும் என அறிவித்தது. அதுமட்டுமின்றி முதல்கட்டமாக 220 கோடி ஒதுக்கீடு செய்து கங்கையை தூய்மைப்படுத்தும் பணியையும் தொடங்கியது. ஆனால் இந்த பணி தொடங்கிய போதிலும் கங்கைநீர் தூய்மையை பெற்றதாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம் குளிப்பதற்கு கூட அந்த தண்ணீர் உகந்ததல்ல என சுற்றுச்சூழல் அலுவலக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் தற்போது கங்கைநீர் ஓரளவுக்கு சுத்தமாக இருப்பதாகவும் குளிப்பதற்கு ஏற்ற வகையில் இருப்பதாகவும் சுற்றுச்சூழல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழித்து சுத்தம் செய்ய முடியாத கங்கை நீர், ஒரு சில நாட்களில் தொழிற்சாலைகளை மூடியதால் தூய்மையானது என்றால், கங்கை நீரில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதே காரணம் அசுத்தத்திற்கு காரணம்என்பது தற்போது தெரிய வருகிறது.

கங்கை மட்டுமன்றி இந்தியாவிலுள்ள பல நதிகளும் தற்போது முன்பை விட அதிகமாக தூய்மையாக இருப்பதாகவும் இதனை அடுத்து மத்திய அரசு இது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான கட்டுரையை சுட்டிக்காட்டிய பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது சமூக வலைத்தளத்தில் ஊரடங்கு உத்தரவு முடிந்தபின்னர் இதுகுறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos