சசிகலா அணி மகளிரணியினரின் நிர்வாண மிரட்டல். அநாகரீக அரசியலின் உச்சக்கட்டம்

  • IndiaGlitz, [Saturday,April 08 2017]

ராஜாஜி, காமராஜர், அண்ணா ஆகியோர்கள் நடத்திய நாகரீக அரசியல் இன்று அநாகரீகத்தின் உச்சக்கட்டத்தில் உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மொத்தமாக பணம் பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்திற்கு சோதனை செய்ய சென்ற பறக்கும் படையினர் முன் சசிகலா அணி மகளிரணியினர் நிர்வாண மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை நடந்த இடைத்தேர்தல்களிலேயே அதிகபட்ச முறைகேடு ஆர்.கே.நகர் தேர்தலில்தான் நடப்பதாக அரசியல் விமர்சகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒருவீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிகளவில் பணம் பதுக்கிவைத்திருப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த வீட்டில் சோதனை நடத்த, பறக்கும்படையினர் துப்பாக்கிய ஏந்திய போலீஸாருடன் சென்றபோது பறக்கும் படையினர்களை பணிசெய்ய விடாமல் சசிகலா அணி மகளிரணியினர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வெளியேற்றினர்.
இதுகுறித்து பறக்கும்படையினர் கூறியபோது, "எங்களுக்குக் கிடைத்த தகவலின்பேரில் சோதனை நடத்தச் சென்றோம். அப்போது, அங்கு இருந்த பெண்கள், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ஒர் அறைக்குள் செல்ல எங்களை அனுமதிக்கவில்லை. அதைமீறி உள்ளே செல்ல நாங்கள் முயன்றபோது, வாசலை வழிமறித்த பெண்கள், ஆவேசமாக, சோதனைதானே நடத்தவேண்டும் என்று கூறியபடி சேலையை கழற்றி எறிந்தார். இதை எதிர்பார்க்காத நாங்கள், உடனடியாக என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினோம். அதற்குள் ஒரு நடுத்தர வயது பெண், தன்னை முழு நிர்வாணமாக்கிக்கொண்டார். திக்குமுக்காடிப்போன நாங்கள், அந்த இடத்தைக் காலி செய்துவிட்டோம். சோதனை நடத்தச் சென்ற இடத்தில் பெண்கள் இப்படி செய்தால், எப்படி எங்களால் கடமையைச் செய்ய முடியும். அதிகார வர்க்கக் குறுக்கீடு, தொண்டர்களின் இப்படியான அடாவடி... இதையெல்லாம் தாண்டித்தான் எங்கள் கடமையைச் செய்ய வேண்டியிருக்கிறது!" என்று வருத்ததுடன் கூறினர்
ஒரு திரைப்படத்தில் வடிவேலு ஒரு பெண்ணை கைது செய்ய போகும்போது உடைகளை கழற்றி எறிந்துவிட்டு 'நீ சரியான ஆம்பளையா இருந்தா உள்ளே வந்து அரெஸ்ட் பண்ணு' என்று கூறும் காமெடி காட்சிதான் இந்த சம்பவம் ஞாபகப்படுத்துவதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது.

More News

ஒரு ரூபாய் அறிவிப்பு செய்ய விஷாலுக்கு என்ன உரிமை இருக்கிறது? திரையரங்கு உரிமையாளர் சங்கம் கண்டனம்

சமீபத்தில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கான போட்டியில் வெற்றி பெற்று பொறுப்பேற்ற நடிகர் விஷால், 'தமிழக திரையரங்கில் ரசிகர்கள் வாங்கும் ஒவ்வொரு டிக்கெட்டிலும் ஒரு ரூபாய் எடுத்து விவசாயிகளுக்கு கொடுக்க உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் விஷாலின் இந்த அறிவிப்புக்கு திரையரங்கு உரிமையா

டாம் குரூஸ் அடுத்த படத்தில் பிரியங்கா சோப்ரா?

இந்திய நடிகைகள் குறிப்பாக பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட் முன்னணி நடிகர்களுடன் இணணந்து நடித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான வின் டீசல் நடித்த 'XXX எக்ஸேண்டர் கேஜ்' படத்தின் நாயகியாக தீபிகா படுகோனே நடித்திருந்தார். அதேபோல் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, 'பே வாட்ச்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்...

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2': டிராக்லிஸ்ட் வெளியீடு

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்களின் டிராக் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. கீரவானி இசையில் இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன...

உலக நாயகன் கமல் வீட்டில் தீ விபத்து. முக்கிய பொக்கிஷங்கள் சேதம்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் மாடிப்படிகளில் இருந்து கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து கொண்டார். இது அவருக்கு ஒரு சோதனையாக கருதப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு சோதனையாக நேற்றிரவு அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது...

விக்ரம்-விஜய்சந்தர் படத்தின் டைட்டில் அறிவிப்பு

சியான் விக்ரம் மற்றும் 'வாலு' இயக்குனர் விஜய்சந்தர் இணைந்து உருவாக்கி வரும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளிவரும் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம். அதன்படி சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது...