close
Choose your channels

ஒரே நாளில் மக்கள் தீர்ப்பும், நீதிபதியின் தீர்ப்பும்

Tuesday, December 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இம்மாதம் 21ஆம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் மக்கள், தங்களுடைய தொகுதியின் எம்.எல்.ஏ யார் என்பதை முடிவு செய்ய வாக்களிக்க காத்திருக்கின்றனர். மக்களின் தீர்ப்பு வாக்குகளாக பதிவு செய்யப்படும் அதே நாளில் திமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தீர்ப்பு என்று கூறப்படும் 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பு வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம், ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் அதே தினமான டிசம்பர் 21ஆம் தேதி 2ஜி வழக்கின் தீர்ப்பு அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு அளிக்கப்படும் என சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர்  பதவியேற்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளிவந்து அவருடைய அரசியல் வாழ்விற்கே அஸ்தமனம் ஏற்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் அதே நாளில் வெளிவரவுள்ள இந்த வழக்கின் தீர்ப்பால் திமுகவின்  வெற்றி பாதிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.