close
Choose your channels

'இந்தியன் 2' விபத்து: ஃபெப்சி நிறைவேற்றிய அதிரடி தீர்மானங்கள்

Friday, February 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டு கிருஷ்ணா, சந்திரன் மற்றும் மதுசூதனன் ஆகிய மூன்று பேர் பரிதாபமாக பலியாகியுள்ள நிலையில் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி புதிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார்.

இதன்படி இனி சினிமா தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் படப்பிடிப்பு நிறுவனங்களோடு மட்டுமே ஊழியர்கள் பணியாற்றும் வகையில் ஒப்பந்தம் செய்யப்படும். மேலும் பாதுகாப்பை உறுதி செய்யும் படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே தொழிலாளர்கள் பணியாற்றும் வகையில் ஒப்பந்தம் செய்யப்படும். தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய விதிகள் ஒரு வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று ஆர்.கே.செல்வமணி நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்.கே.செல்வமணியின் இந்த அறிவிப்பால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இனிமேலும் ஒரு உயிர் கூட சினிமா படப்பிடிப்பு விபத்தில் இழக்கக்கூடாது என்பதில் ஃபெப்சி தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.