இந்தியாவில் மொத்தம் 5 திருடர்கள் இருக்கின்றார்கள்! ஆர்.கே.செல்வமணி

  • IndiaGlitz, [Monday,July 10 2017]

சகுந்தலாவின் காதலன்' என்ற படத்தின் இசை வெளீயீட்டு விழாவில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இன்றைய முக்கிய பிரச்சனையான திரைத்துறையின் மீதான இரட்டை வரி பிரச்சனை குறித்து பேசினார். அவர் பேசியதாவது:
இன்றைக்கு விவசாயி மற்றும் தயாரிப்பாளர் ஆகிய இருவரின் நிலைமையும் ஒன்றாக உள்ளது. ஒரு பொருளை உற்பத்தி செய்த விவசாயி அந்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலையில் உள்ளார். அதேபோல் தான் திரைப்பட தயாரிப்பாளரும். அவர் தயாரித்த படத்திற்கு விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலையில் உள்ளார். விவசாயிக்க்காவது ஒரு குறிப்பிட்ட விலை கிடைக்கின்றது. ஆனால் பல திரைப்படங்கள் தயாரிப்பாளருக்கு எந்தவித முன்பணமும் இல்லாமல் வியாபாரம் ஆகின்றது. இந்த நிலை மாற வேண்டும்
ஒரு திரைப்படத்தை வெளிநாட்டில் யாரோ உள்ள ஒருவர் ஒரு ஜிபியில் இண்டர்நெட்டில் திருட்டுத்தனமாக அப்லோடு செய்துவிடுகிறார். அந்த படத்தை அனைவரும் டவுன்லோடு செய்து பார்த்துவிடுகின்றனர். இந்த திருட்டுத்தனத்திற்கு துணை நிற்பவர்கள் தொலைத்தொடர்பு துறையினர். பிஎஸ்என்எல், ஏர்டெல், ஏர்செல், ரிலையன்ஸ், டாடா ஆகிய ஐந்து பேர்களும் ஐந்து திருடர்கள். இவர்களுடைய துணையுடன் தான் இந்த திருட்டு நடக்கின்றது. ஆனால் இவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை, அபராதமும் இல்லை. ஒரு திரைப்படத்தை 40 கோடி பேர் டவுன்லோடு செய்தால் 40 கோடி ஜிபிக்கான பணம் இந்த ஐந்து திருடர்களுக்கும் கிடைத்துவிடுகிறது. இதற்கு இந்திய அரசும் உடந்தை என்பதுதான் வருத்தமான விஷயம்' என்று பேசினார்.

More News

மீண்டும் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல கோலிவுட் நடிகை

பிரபல நடிகையும், ஷங்கரின் '2.0' படத்தின் நாயகியுமான எமிஜாக்சன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கவர்ச்சியான மற்றும் டாப்லெஸ் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் டாப்லெஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய கஞ்சா கருப்பு எங்கே? அதிர்ச்சி தகவல்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 பேர்களில் இதுவரை மூன்று பேர் வெளியேறியுள்ளனர்.

தமிழகம் கலவர பூமியாகும். மத்திய அமைச்சரே இப்படி மிரட்டுவதா?

ஒரு நாட்டின் மத்திய அமைச்சர் ஒருவரே தமிழகம் கலவர பூமியாகும் என்று மிரட்டியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'விஐபி 2' விழாக்களில் ஐஸ்வர்யா தனுஷ் கலந்து கொள்ளாதது ஏன்? செளந்தர்யா

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், கஜோல் நடித்த 'விஐபி 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதும் சரி, சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலும் சரி தனுஷின் மனைவியும், இயக்குனர் செளந்தர்யாவின் சகோதரியுமான ஐஸ்வர்யா கலந்து கொள்ளவில்லை...

ஹாலிவுட் பட ஸ்டைலில் ஒரு வித்தியாசமான திருட்டு: 3 கிலோ நகைகள் கொள்ளை

பெங்களூரில் உள்ள ஒரு நகைக்கடையில் ஹாலிவுட் பட ஸ்டைலில் 3 கிலோ நகைகளை ஒரு திருடன் கொள்ளையடித்துவிட்டு மாயமாகியுள்ளான். அந்த திருடனை பிடிக்கும் முயற்சியில் பெங்களூர் போலீசார் தீவிரவேட்டையில் உள்ளனர்...